பொழுதுபோக்கு

அக்கட தேசத்து ஹீரோயினை நம்ப வச்சு மோசம் செய்த இயக்குனர்…

சமீபத்தில் வெளியான அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அந்த நடிகரும் இயக்குனரும் செம ஹேப்பி.

ஆனா அந்த நடிகை மட்டும் அப்செட்டில் இருக்கிறாராம். பக்கத்து மாநிலத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை படத்தில் இன்னொரு ஹீரோயின் இருக்கும் விஷயமே கடைசிவரை தெரியாதாம்.

இயக்குனர் கதை சொன்ன போது அப்படியே இந்த விஷயத்தை மூடி மறைத்திருக்கிறார். நடிகையும் தனக்கு ஒரு நல்ல பிரேக் இப்படத்தின் மூலம் கிடைக்கும் என நம்பி ஓகே சொல்லி இருக்கிறார்.

படப்பிடிப்பில் கூட இந்த விஷயம் நடிகைக்கு தெரியாமல் இயக்குனரும் நடிகரும் பார்த்துக் கொண்டார்களாம். கடைசியில் இரண்டு ஹீரோயின்களும் சேர்ந்து வரும் காட்சியை படமாக்கும் போது தான் நடிகைக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

இது பற்றி இயக்குனரிடம் கேட்டபோது முழு படத்தையும் பாருங்கள் என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு படத்தை பார்த்த நடிகை செம டென்ஷன் ஆகியிருக்கிறார்.

ஏனென்றால் மற்றொரு ஹீரோயினுக்கு தான் கிளாமர் பாடல் என கொஞ்சம் முக்கியத்துவம் இருந்திருக்கிறது. அதேபோல் படம் வெளியாகி அந்த நடிகை தான் கொண்டாடப்பட்டு வருகிறார்.

படம் ஹிட் ஆனாலும் இந்த சதியால் நடிகை நொந்து போயிருக்கிறார். இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்திட்டாங்களே என இயக்குனர் நடிகர் மீது நடிகை செம காண்டில் இருக்கிறாராம்.

(Visited 24 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்