இலங்கை செய்தி

புலிகளின் தங்கம், பணத்தை தேடிய நபர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 54 வயதுடைய ஓமந்த பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிவித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஸ்கேனருடன் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளர்.

சோதனையின் போது, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அந்த சந்தேக நபர்களுக்கு சொந்தமான கையடக்க தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content