ஆப்பிள் மற்றும் கஞ்சா கடைகளை சூறையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக்காரர்கள்

லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற அதிகாரிகள் தலைமையிலான சோதனைகளுக்கு எதிரான போராட்டம் கொள்ளை மற்றும் நாசவேலைகளின் இரவாக மாறியது.
நகர மையத்தில் உள்ள ஆப்பிள், அடிடாஸ், நகைக் கடை, கஞ்சா கடைகள் மற்றும் ஒரு மருந்தகம் உள்ளிட்ட பல கடைகளை மக்கள் கொள்ளை அடித்துள்ளனர் .
போராட்டக்காரர்கள் பிராட்வேயில் உள்ள ஆப்பிள் கடையின் ஜன்னல்களை உடைத்து பல சாதனங்களைத் திருடினர்.
சிலர் அடிடாஸ் கடைக்குள் நுழைந்து ஸ்னீக்கர்களை திருடியுள்ளனர், அதே நேரத்தில் ஒரு கும்பல் அருகிலுள்ள நகைக் கடையின் ஜன்னல்களை உடைத்து அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர்.
இரண்டு கஞ்சா கடைகள் மற்றும் ஒரு மருந்தகத்தையும் சூறையாடியுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)