அரசியல் இலங்கை செய்தி

குட்டி நாயா, பெரிய நாயா? சிறிதரன், அர்ச்சுனாவுக்கிடையில் கடும் சொற்போர்!

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறிதரன் மற்றும் அர்ச்சுனாவுக்கிடையில் இன்று (26) கடும் சொற்போர் மூண்டது.

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றபோதே இருவரும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து கொண்டனர்.

“குட்டி நாய் மாதிரி குறைத்துக்கொண்டிருக்ககூடாது…” என்று சிறிதரன் எம்.பி., இளங்குமரன் எம்.பியை நோக்கி குறிப்பிட்டார்.

இதன்போது இடைமறித்த அர்ச்சுனா எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து குட்டிநாய், பெரிய நாய் என்று விளிக்ககூடாது என இடித்துரைத்தார்.

இந்த விடயத்தை அர்ச்சுனா எம்.பி., மீண்டும், மீண்டும் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதனால் கடுப்பான சிறிதனர் எம்.பி., விசர் கதை வேண்டாம் என
அர்ச்சுனா எம்.பியை நோக்கி கடுந்தொனியல் விளாசித் தள்ளினார்.

“ஓல் (சாதாரணதரம்) படித்தவர்களுடன் எனக்கு கதைக்க முடியாது.” என்று அர்ச்சுனா சிரித்தபடியே குறிப்பிட்டார். இதனால் சிறிதரன் எம்.பி. கடுப்பானார். கடும் வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள்மீதும் சிறிதரன் எம்.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனால் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!