முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்தை ஒப்படைக்குமாறு ஜே.வி.பிக்கு உத்தரவு
கம்பஹா, யக்கலவிலுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் Frontline Socialist Party அலுவலகத்தை, ஜே.வி.பி JVP கைப்பற்றியது சட்டவிரோதம் என கம்பஹா நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், குறித்த அலுவலகத்தை முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்பஹா மேலதிக நீதிவான் ஷிலானி பெரேரா நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என, முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
மேற்படி அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னிலை சோசலிசக் கட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார்.




