05 வருடங்களுக்கு பிறகு மீளவும் சீனாவிற்கான விமானசேவைகளை ஆரம்பித்த இந்தியா!
இந்தியாவும், சீனாவும் இன்று முதல் நேரடி விமான சேவைகளை மீளவும் ஆரம்பித்துள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு இமாலயா பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோதல்களை தொடர்ந்து ஐந்து வருட காலமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. விமானங்களை மீண்டும் தொடங்குவது “மக்களுக்கு இடையேயான தொடர்பை” அதிகரிக்கும் மற்றும் “இருதரப்பு பரிமாற்றங்களை படிப்படியாக இயல்பாக்குவதற்கு” உதவும் என்று இந்திய அரசாங்கம் கூறியது.
இந்தியாவின் மிகப்பெரிய வணிக விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) , தினசரி விமானத்தை இயக்கவுள்ளது.
இந்த விமானமானது இன்று இரவு 10 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து (Kolkata) குவாங்சோவுக்கு (Guangzhou) புறப்படுகிறது. கூடுதல் விமான சேவைகள் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
(Visited 3 times, 4 visits today)





