ஐரோப்பா

பிரித்தானியாவில் உயிரிழந்த பெண்ணின் கருப்பையில் இருந்து பிறந்த முதல் குழந்தை!

  • February 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உயிரிழந்த ஒருவரின் கருப்பையில் இருந்து குழந்தையொன்று பிறந்துள்ளது. டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள குயின் சார்லோட் மற்றும் செல்சியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் ஹ்யூகோ பவல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது 3.1 கிலோ எடையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தாயான கிரேஸ் பெல் (Grace Bell), மேயர்-ரோகிடான்ஸ்கி-குஸ்டர்-ஹவுசர்   என்ற அரிய என்ற அரியவகை நோயுடன்  பிறந்துள்ளார். அதாவது அவர் பிறக்கும்போதே கருப்பையின்றி பிறந்துள்ளார். அவர் டீனேஜ் பருவதை அடைந்ததும் இந்த […]

உலகம்

அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் – இருவர் மரணம்!

  • February 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக மேரிலாந்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிராந்தியம் முழுவதும் பரவலான மின் தடை மற்றும், போக்குவரத்து தடையை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேரிலாந்தின் கால்வர்ட் கவுண்டியில் (Calvert County), வாகனம் ஒன்றின்மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இருவர்  உயிரழந்துள்ளதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோல் புயலின் போது மேரிலாந்தின் சில பகுதிகளில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் ரோட் தீவு மற்றும் மாசசூசெட்ஸின் (Massachusetts) […]

விளையாட்டு

வாழ்வா, சாவா? இலங்கை, நியூசிலாந்து இன்று மோதல்!

  • February 25, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை Sri Lanka மற்றும் நியூசிலாந்து New Zealand அணிகளுக்கிடையிலான மிக முக்கிய போட்டி இன்று (25) நடைபெறுகின்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். அரையிறுதி சுற்றுக்குரிய வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு இரு அணிகளுக்குமே இப்போட்டியில் வெற்றி முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே, வெற்றியை இலக்காகக் கொண்டு இரு அணிகளும் தீவிர முனைப்பு காட்டக்கூடும். சூப்பர் 8 சுற்றில் […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் முடிவுக்கு வரவேண்டும்: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

  • February 25, 2026
  • 0 Comments

உக்ரைன்மீது Ukraine ரஷ்யா Russia தொடுத்துள்ள சட்டவிரோதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாAustralia மீண்டும் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன்மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கப்பட்டு நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் செனட்டர் பெனி வோங் Senator Penny Wong விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி அறிக்கையில் உக்ரைனுக்கான தனது முழுமையான ஆதரவை ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், உக்ரைனின் தற்காப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளுக்காகச் சுமார் 1.7 பில்லியன் ஆஸ்திரேலிய […]

இலங்கை செய்தி

4 மாதங்களுக்குள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் கைது! பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு!!

  • February 25, 2026
  • 0 Comments

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான அகன்று செல் விசேட நடவடிக்கையின்கீழ் நாட்டில் கடந்த நான்கு மாதங்களுக்குள் ஒரு லட்சத்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 900 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். 4 மாத காலப்பகுதிக்குள் 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று 24 நடைபெற்றது. இதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்.யு. வூட்லரும் பங்கேற்றிருந்தார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “ஜனாதிபதியின் […]

இலங்கை

வீதியில் உலர வைத்த நெல்லுடன் சறுக்கி விழுந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்!!

  • February 24, 2026
  • 0 Comments

வீதியில் உலர வைத்த நெல்லுடன் சறுக்கி விழுந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்!! திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மொரவெவ பிள்ளையார் கோயில் அருகே இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து மொரவெவ பிரதேசத்திற்கு வேளாண்மை அறுவடைக்காக வந்த மெசின் இயந்திரத்திற்கு உடைந்த பொருட்களை பொருத்துவதற்காக உதிரி பாகங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த இளைஞர் வீதியில் உலர வைத்த நெல்லில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்த நிலையில் படுகாயமடைந்தார். இதனை அடுத்து மஹதிவுல்வெவ […]

#BreakingNews #TrincomaleeNews #Kinniya #PoliceRaid #IllegalOysterFactory #info4tamils #iftamil #TamilNewsToday #திருகோணமலை #கிண்ணியா #அதிரடி இலங்கை செய்தி

“கிண்ணியாவில் அதிரடி!” – சட்டவிரோத சிப்பி தொழிற்சாலைகள் பொலிஸாரால் முற்றுகை.

  • February 24, 2026
  • 0 Comments

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை களப்புக்கு அருகில் இரண்டு இடங்களில் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக நடாத்தப்பட்டு வந்த இரண்டு சிப்பி தொழிற்சாலைகளை (24) முற்றுகையிட்டனர். திருகோணமலை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பெருமளவிலான சிப்பிகள் மற்றும் நான்கு அரைக்கும் இயந்திரங்களுடன் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு சட்டவிரோத தொழிற்சாலைகள் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு. மஹிந்த திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், […]

அரசியல் இலங்கை

கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

  • February 24, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். திருவிழா தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (24) நடைபெற்றுள்ளது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும்  பக்தர்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், கழிவறை வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு […]

ஐரோப்பா

விட்டிலிகோ நோயை குணப்படுத்த புதிய க்ரீம் அறிமுகம்!

  • February 24, 2026
  • 0 Comments

விட்டிலிகோ நோயை குணப்படுத்த முதல் முறையாக க்ரீம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை Ruxolitinib (Opzelura என விற்கப்படுகிறது) என்ற க்ரீமை அங்கீகரித்துள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ்  (National Institute for Health and Care Excellence) விட்டிலிகோவின் தாக்கம் உள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த க்ரீமை பரிந்துரைக்கிறது. குறிப்பாக பிற மேற்பூச்சு சிகிச்சைகள் தோல்வியடைந்தால் இந்த க்ரீம் பரிந்துரைக்கப்படுகிறது. விட்டிலிகோ என்பது […]

இலங்கை செய்தி

தபாலில் அனுப்பிவைக்கப்பட்ட 04 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

  • February 24, 2026
  • 0 Comments

400,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் ஒரு இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படவுள்ளதாக அதன் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். வேரஹெர, அனுராதபுரம், மாத்தறை மாவட்ட அலுவலகங்களிலும் தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான சுமார் 8 இலட்சம் அட்டைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்கும் […]

error: Content is protected !!