உலகம்

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் தண்டனை – மோசடியாளர்களுக்கு 24 பிரம்படிகள் உறுதி!

  • December 19, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில்   குற்றவியல் சட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய மோசடி செய்பவர்கள்  24 பிரம்படிகளை கட்டாயமாக பெறுவார்கள் என உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இந்த தண்டனை டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. மேலும் இந்த சட்டமானது ஏற்கனவே உள்ள சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனைகளையும் வலுப்படுத்துகிறது. இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நமது குற்றவியல் சட்டங்கள் பயனுள்ளதாகவும், நியாயமாகவும், வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்ப செயல்படுவதையும் உறுதி செய்துள்ளதாக  […]

Meeting between ACJU representatives and Muslim Media Forum members இலங்கை செய்தி

ஜம் இய்யதுல் உலமா – முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு!!

  • December 19, 2025
  • 0 Comments

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு (18) வியாழக்கிழமை மாலை உலமா சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தலைமையிலான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, 100 வருட வரலாற்றைக் கொண்ட உலமா சபை முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் சமூக வலுவூட்டலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் குறித்தும் விரிவான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நாட்டின் பல்வேறு […]

உலகம் ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் நியமனம்

  • December 19, 2025
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக (Archbishop of Westminster) பேராயர் ரிச்சர்ட் மோத் (Richard Moth) நியமிக்கப்பட்டுள்ளார். வத்திகான் இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, 2009 ஆம் ஆண்டு முதல் இப்பொறுப்பை வகித்து வந்த 80 வயதான கார்டினல் வின்சென்ட் நிக்கோல்ஸின் (Vincent Nichols) ஓய்வைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக Arundel மற்றும் Brighton ஆயராகப் பணியாற்றிய ரிச்சர்ட் மோத், சுமார் 60 இலட்சம் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவராகப் […]

Trincomalee to Colombo morning train service launch updates. இலங்கை செய்தி

திருமலை – கொழும்பு காலை நேர ரயில் சேவை நாளை ஆரம்பம்

  • December 19, 2025
  • 0 Comments

திருகோணமலை – கொழும்பு கோட்டை நேரடி புகையிரத சேவை நாளைய தினம் முதல் (20.12.2025) ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி (7084) காலை 07.00 மணிக்கு புறப்படும் அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து (7083) திருகோணமலை நோக்கி காலை 06.00 மணிக்கு புறப்படும். இரவு ரேந ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் […]

உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • December 19, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட சில பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று வெள்ளிக்கிழமை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பாக்லான் மாகாணத்தின் நஹ்ரின் மாவட்டத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில், தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பல தசாப்த கால மோதல்கள் […]

ஐரோப்பா

பாரிஸின் லூவ்ரே ( Louvre) அருங்காட்சியகம் மீளவும் திறப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

பாரிஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் இன்று மீளவும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீளவும் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், அருங்காட்சியகம் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியக ஊழியர்களின் பொதுக் கூட்டத்தின் போது வேலைநிறுத்தத்தை கைவிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க தொழிலாளர்கள் ஜனவரி 5 ஆம் திகதி  மற்றொரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? திங்கள் மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உலக வங்கியால் கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் ஏற்பட்ட மொத்த இழப்பு தொடர்பான உத்தேசத்தை மேற்படி அறிக்கைமூலம் அறியமுடியும். 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி சந்தைக்குவரும்போது ஏற்படும் பணவீக்கம் தொடர்பான காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பொருட்கள் […]

ஐரோப்பா செய்தி

ukவின் புதிய உளவுத்துறை தலைவருடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிகாரி!

  • December 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் MI6 உளவுத்துறை தலைவராக பதவியேற்ற பிளேஸ் மெட்ரெவேலி (Blaise Metreweli)   ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரியுடன் “நீண்ட” தொலைபேசி உரையாடலை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஊடகங்கள் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரி செர்ஜி நரிஷ்கின் (Sergey Naryshkin) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் லண்டனில் அதிகாரப்பூர்வமாகப் பணியாற்றினர் என்றும், SIS அதிகாரிகள் மொஸ்கோவில் அதையே செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இருப்பினும் தொலைபேசியில் பேசப்பட்ட விடயங்களை அவர் வெளியிடவில்லை என்பதும் […]

அரசியல் இலங்கை செய்தி

குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

  • December 19, 2025
  • 0 Comments

500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிதியை பெறும் நோக்கிலேயே குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரியவால் நேற்று காலை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முற்பகல் முதல் மாலைவரை பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பின்றி குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கை

புயலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கை சுற்றுலாத்துறை இந்த ஆண்டில் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 93,031 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்  (SLTDA)  குறிப்பிட்டுள்ளது. இது நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2,196,624 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து குறிப்பிடத்தக்க சுற்றுலாப் பயணிகள்  […]

error: Content is protected !!