ரஷ்யாவை மற்ற நாடுகள் மரியாதையுடன் நடத்தினால், உக்ரைன் போருக்குப் பிறகு வேறு எந்தப் போரும் ஏற்படாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற நான்கு மணிநேர ‘டைரக்ட் லைன்’ (Direct Line) நேரடி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது வெறும் “முட்டாள்தனமானது” என வர்ணித்தார். உக்ரைன் போரை அமைதி முறையில் முடிவுக்குக் கொண்டு வரத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் நேட்டோ (NATO) […]
ஆந்திர பிரதேசத்தில்(Andhra Pradesh) மதுபானம் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், ஒரு இளைஞன் தனக்கு அறிமுகமில்லாத ஒருவரைக் கொன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதையில் இருந்ததாகக் கூறப்படும் 17 வயது இளைஞன், மதுபானக் கடை அருகே 49 வயது டாடாஜி(Tataji) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவரை அணுகி மது வாங்க பணம் கேட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. “மது வாங்க 10ரூபாய் கொடுக்க மறுக்கப்பட்டதால், அந்த நபர் ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார்” என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் […]
பிரித்தானியாவின் வெஸ்டன்-சூப்பர்-மேயர் (Weston-super-Mare) பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமி ஆரியா தோப்பிற்கு (Aria Thorpe) அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஆரியா “மகிழ்ச்சியும் ஒளியும் நிறைந்த ஒரு தேவதை” என்றும், அவளது இழப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை அளித்துள்ளதாகவும் அவளது பெற்றோர் தெரிவித்துள்ளனர். பாடவும் நடனமாடவும் விரும்பும் ஆரியா, கணிதப் புதிர்களில் அதிக ஆர்வம் கொண்டவள் என அவளது தந்தை உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் […]
ஸ்காட்லாந்து வரலாற்றில் முதல் முறையாக, தேசிய சுகாதார சேவையின் (NHS) வதிவிட மருத்துவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். 2008 ஆம் ஆண்டு நிலவிய ஊதிய மட்டத்திற்கு இணையாகச் சம்பளத்தை உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை ஸ்காட்லாந்து அரசாங்கம் மீறிவிட்டதாகக் கூறி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ சங்கமான பி.எம்.ஏ (BMA) நடத்திய வாக்கெடுப்பில், 92 சதவீதமான மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 […]
பல தசாப்தங்களாக நகரின் திரைப்பட ரசிகர்களை ஈர்த்த புகழ்பெற்ற காபூல்(Kabul) திரையரங்கம், ஒரு பேரங்காடிக்காக(shopping mall) இடிக்கப்பட்டுள்ளது. 1960களில் கட்டப்பட்ட அரியானா(Haryana) திரையரங்கம், 1992-1996 ஆப்கானிஸ்தானின்(Afghanistan) உள்நாட்டுப் போரில் அழிக்கப்பட்டது, பின்னர் 2004ல் பிரெஞ்சு தலைமையிலான மறுசீரமைப்பு முயற்சி மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் 2021ல் தலிபான்(Taliban) அதிகாரிகளின் ஆட்சியின் போது திரைப்படங்கள், இசை மற்றும் பிற பொழுதுபோக்குகளை தடை செய்ததன் மூலம், திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுவதற்கு முன்பு அவ்வப்போது பிரச்சார படங்கள் ஒளிபரப்பப்பட்டது. “அரியானா திரையரங்கம் இடிக்கப்பட்ட […]
விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. டிட்வா புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நாட்டின் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்கு பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது. புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு IMF […]
உலக பணக்காரர் ஜெஃப் பெசோஸால்(Jeff Bezos) நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின்(Blue Origin), முதல் முறையாக சக்கர நாற்காலி(wheelchair) வீரரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. விண்வெளி(aerospace) மற்றும் மெக்கட்ரானிக்ஸ்(mechatronics) பொறியாளரான மைக்கேலா மிச்சி பென்தாஸ்(Michaela “Michi” Benthaus), வரவிருக்கும் NS-37 பயணத்தில் ஐந்து குழு உறுப்பினர்களுடன் இணைய உள்ளார். 2018ம் ஆண்டு ஏற்பட்ட சைக்கிள் விபத்திற்குப் பிறகு சக்கர நாற்காலியில் இருக்கும் பென்தாஸுடன், பொறியாளர் ஹான்ஸ் கோனிக்ஸ்மேன்(Hans Koenigsmann), தொழில்முனைவோர் நீல் மில்ச்(entrepreneur Neil Milch), […]