உலகம்

போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – தாக்குதல்தாரியை எதிர்கொண்ட நபருக்கு 2.5 மில்லியன் பரிசு!

  • December 20, 2025
  • 0 Comments

போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது தாக்குதல் தாரி ஒருவரை தைரியமாக எதிர்கொண்ட கடை உரிமையாளருக்கு 2.5 மில்லியன் (£1.24 மில்லியன்) ஆஸ்திரேலிய டொலருக்கான காசோலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை மருத்துவமனையில் வைத்து அவரிடம் இந்த காசோலை கையளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களில் ஒருவரைத் தாக்குவதற்கு முன்பு, அகமது அல் அகமது என அழைக்கப்படும் நபர் காரின் பின்னால் மறைந்திருந்து தாக்குதல்தாரியை எதிர்கொண்டார். இதனை காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தன. […]

உலகம் செய்தி

பங்களாதேஷில் கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது – சசி தரூர் கண்டனம்

  • December 20, 2025
  • 0 Comments

பங்களாதேஷில் தற்போது இருப்பது போன்ற கும்பல் ஆட்சி நீடிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பாட்னா விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘‘இந்தியா, பங்களாதேஷுடன் நல்லுறவை விரும்புகிறது என்பதையும், அங்கு அமைதி பேணப்பட வேண்டும் என்பதையும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூறியுள்ளது. பங்களாதேஷில் பெப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் […]

ஐரோப்பா

பிரான்ஸ் எல்லையில் புலம்பெயர்ந்தோருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல்!

  • December 20, 2025
  • 0 Comments

பிரான்ஸில் நூற்றுக்கணக்கானோர் இன்று காலை ஆங்கிலக்கால்வாயை கடக்க முற்பட்ட  நிலையில் பிரான்ஸ் காவல்துறையினருக்கும், குடியேறிகளுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 700 குடியேறிகள் சிறிய படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரான்ஸ் காவல்துறையினர் புலம்பெயர்ந்தோர் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 41000 புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டை மீட்க முழு ஆதரவு: அரசிடம் எதிர்க்கட்சி தலைவர் உறுதி!

  • December 20, 2025
  • 0 Comments

“ டித்வா சூறாவளியை சாதாரணமான விடயமாகக் கருதக்கூடாது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) வலியுறுத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தவேளையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “ பொறுப்பற்ற – கேலிக்கையான பார்வைகளால் தான், சுனாமியிலிருந்து கூட எம்மால் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இன்றளவிலும் “ டாப்ளர் […]

அரசியல் இலங்கை செய்தி

31 ஆம் திகதிக்குள் செய்து முடிங்கள்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

  • December 20, 2025
  • 0 Comments

“ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளர் – தகாத நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

  • December 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் டேவிட் வொலியம்ஸ்(David Walliams), வெளியீட்டாளர் ஹார்பர்காலின்ஸ் UK (HarperCollins UK) அவரது புத்தகங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திய பின்னர், தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவருக்கு எதிராக எதையும் உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் அவர் எந்த விசாரணையிலும் பங்கேற்கவில்லையென்றும் Walliams இன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மற்றும் அவர் மீதான தகாத நடத்தை குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார். ஹார்பர்காலின்ஸ் UK, புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் […]

ஐரோப்பா செய்தி

வேல்ஸின் தலைநகர் கார்டிஃப்பின் 70 ஆவது பிறந்த நாள்

  • December 20, 2025
  • 0 Comments

வேல்ஸின் தலைநகராக கார்டிஃப் (Cardiff) அறிவிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நகரத்தில் மறைந்திருக்கும் வரலாற்றுச் சுவடுகள் மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரயில்வே பாலங்களில் உள்ள குண்டுத் துளைகள் முதல் நிலத்தடி பதுங்கு குழிகள் வரை, கார்டிஃப் ஒரு வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றை தன்னகத்தே கொண்ட நகரமாக உள்ளதென தெரிவிக்கப்படுகிறது. நவீன காலத்தின் நகர வளர்ச்சிக்கிடையிலும், அதனை உருவாக்கிய கடந்தகாலக் கதைகளின் சாட்சிகள் இன்னும் பல இடங்களில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் […]

உலகம் ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் பயணங்களில் கடும் நெரிசல்: 37 மில்லியன் வாகனங்கள் வீதியில் இறங்க வாய்ப்பு

  • December 20, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படும் என RAC அமைப்பு எச்சரித்துள்ளது. டிசம்பர் 25-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 37.5 மில்லியன் பொழுதுபோக்கு பயணங்கள் மேற்கொள்ளப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8 மில்லியன் பயணங்கள் அதிகமாகும். 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் பரபரப்பான கிறிஸ்துமஸ் முந்தைய காலமாக இது அமையவுள்ளது. வானிலை சீராக இருந்தாலும், குளிர் மற்றும் மூடுபனி காரணமாக பயணங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்காக களமிறங்கும் இந்தியா: ஜெய்சங்கரிடம் மோடி அனுப்பும் செய்தி என்ன?

  • December 20, 2025
  • 0 Comments

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், இது விடயத்தில் இந்தியா முக்கிய வகிபாகத்தை வகிக்குமென தெரியவருகின்றது. தனது இலங்கை பயணத்தின்போது கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடனேயே எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகின்றார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதன் முதலில் இந்தியாவே நேசக்கரம் நீட்டியது. மீட்பு […]

உலகம் செய்தி

சிரியாவில் உள்ள ISIS அமைப்பின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப்

  • December 20, 2025
  • 0 Comments

சிரியாவின் பால்மைரா உநகரில் இரண்டு அமெரிக்க வீரர்களும்மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சிரியாவில் உள்ள ISIS (ISIL) பயங்கரவாத அமைப்பை இலக்கவைத்து அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வட கரோலினா மாநிலத்தின் ராக்கி (Rocky)மவுண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தங்கள் மூன்று தேசபக்தர்களை கொலை செய்த பயங்கரவாதிகள் மீது பெரும் தாக்குதலுக்கு தான் உத்தரவிட்டதாகவும் டரம்ப் இதன்போது […]

error: Content is protected !!