ஐரோப்பா

துருக்கியில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி கைது!

  • December 27, 2025
  • 0 Comments

புத்தாண்டு கொண்டாட்டங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த பிரதான சூத்திரதாரியை துருக்கி காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். தென்கிழக்கு நகரமான மாலத்யாவில் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய கூட்டு நடவடிக்கையில் இப்ராஹிம் புர்டகுசின் (Ibrahim Burtakucin) என்ற நபர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் துருக்கி மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், மோதல் மண்டலங்களில் நடந்து வரும் சண்டையில் சேர வாய்ப்பு தேடி வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

உலகம் செய்தி

சிவப்புக் கோட்டை கடந்த அமெரிக்கா – 20 நிறுவனங்கள், 10 நிர்வாகிகள் மீது தடை விதித்த சீனா!

  • December 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவிற்கு சொந்தமான 20 பாதுகாப்பு  நிறுவனங்கள் மற்றும் 10 நிர்வாகிகள் மீது தடைகளை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. தைவானுக்கு தேவையான இராணுவ உபகரணங்களை விநியோகம் செய்துவது தொடர்பில் வொஷிடன் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சீனாவில் உள்ள நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றைக் கையாள்வதைத் தடை செய்வதும் இந்தத் தடைகளில் அடங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிறுவனங்களில் நார்த்ரோப் க்ரம்மன் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன் ( Northrop […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா ரணில்? அவரின் திட்டம் என்ன?

  • December 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வரமாட்டார் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் நெருக்கத்துக்குரிய அரசியல் சகாக்களில் ஒருவராக ராஜித சேனாரத்ன விளங்குகின்றார். சஜித் தரப்புடன் பயணித்த அவர் தற்போது மீண்டும் ரணில் பக்கம் தாவியுள்ளார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன கூறியவை வருமாறு, “ நாடாளுமன்றம் […]

இலங்கை

வாகன கொள்வனவில் கடும் வீழ்ச்சி – விலையை குறைக்குமாறு பரிந்துரை!

  • December 27, 2025
  • 0 Comments

பொது மக்கள் பயன்படுத்தும் சிறிய வாகனங்களின் விலைகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானகே வலியுறுத்தியுள்ளார். குறைந்த எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களின் விலையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக பொதுமக்கள் வாங்கக்கூடிய Alto, Wagon R, Yaris, Hustler போன்ற வாகனங்கள் மற்றும் 1000 சிசி வகை வாகனங்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடந்து வரும் பேரழிவு […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் தனித்துவிடப்பட்டுள்ள மஹிந்த!

  • December 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa கொழும்பில் ஏன் மீண்டும் குடியேறினார் என்பது தொடர்பான விளக்கத்தை அவரது மகன் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அரச மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa வெளியேறினார். கொழும்பு விஜேராம Wijerama Mawatha மாவத்தையில் இருந்து அவர் தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றார். இதுவிடயத்தில் அரசியல் பிரசாரத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்தது. இந்நிலையில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஏப்ரலில் மீண்டும் நெருக்கடி நிலை: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

  • December 27, 2025
  • 0 Comments

“எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து உள்ளது. இதற்கு அரசாங்கம் இடமளிக்ககூடாது. ஆளும் மற்றும் எதிரணிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க Roshan Ranasinghe தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு , “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிந்தித்து செயல்பட்டால் நல்லது. ஏனெனில் எதிர்வரும் ஏப்ரல் , மே மாதம் ஆகும்போது நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து […]

அரசியல் இலங்கை செய்தி

குவியும் சர்வதேச உதவிகள் குறித்து இலங்கை திருப்தி!

  • December 27, 2025
  • 0 Comments

“ இலங்கையானது (srilanka) நிச்சயம் மீண்டெழும். இருந்தநிலையைவிட நிச்சயம் நாம் சிறந்த நிலைக்கு முன்னோக்கி செல்வோம்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் (cabinet Spokesperson), அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை மீண்டெழுவதற்காக சர்வதேச நாடுகள் தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கிவருகின்றன. இலங்கைமீது சர்வதேச சமூகத்துக்கு (international community) நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வாறு உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இதன்மூலம் இலங்கையை இருந்த இடத்தைவிட சிறந்த நிலைக்கு […]

இந்தியா செய்தி பொழுதுபோக்கு

ரிலீஸ் ஆனது ‘பாகுபலி: தி எபிக்’! ஓடிடியில் மஹிழ்மதியின் பிரம்மாண்டம்.

  • December 27, 2025
  • 0 Comments

உலகத்தையே வியக்க வைத்த ராஜமௌலியின் ‘பாகுபலி’ பிரபஞ்சம் இப்போது அனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: தி எபிக்’ (Baahubali: The Epic) என்ற பெயரில் ஓடிடியில். இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி உருவாக்கிய பிரம்மாண்டமான மஹிழ்மதி சாம்ராஜ்யத்தின் கதையை, அனிமேஷன் தொடராக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) நிறுவனம் தயாரித்துள்ளது. இது பாகுபலி திரைப்படத்தின் தொடர்ச்சி அல்ல. அமரேந்திர பாகுபலி மற்றும் பால்வால்தேவன் ஆகியோரின் இளமைக்கால வீரதீரச் செயல்கள், அவர்கள் எப்படி போர் வித்தைகளைக் கற்றார்கள் மற்றும் மஹிழ்மதி […]

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், கன்னக்குழிக்காரா பாடல், ட்ரெயின் மூவி, மிஷ்கின் இசை, Vijay Sethupathi, Shruti Haasan, Kannakuzhikaaraa Song, Train Tamil Movie, Mysskin Musical. பொழுதுபோக்கு

கன்னக்குழிக்காரா: ஸ்ருதிஹாசன் குரலில் ஒரு மெலோடி மேஜிக்!

  • December 26, 2025
  • 0 Comments

மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ படத்தின் முதல் பாடலாக “கன்னக்குழிக்காரா” கடந்த டிசம்பர் 24, 2025 அன்று வெளியானது. இந்தப் படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார். அவரது தனித்துவமான பாணியில் உருவான இந்த மெலோடி பாடலுக்கு கபிலன் வரிகள் எழுதியுள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் அறியப்படும் ஸ்ருதிஹாசன், இப்பாடலை மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பாடியுள்ளார். கிராமத்து பின்னணியில் அமைந்த இந்த காதல் பாடல், கேட்பவர்களை நெகிழ வைக்கிறது. விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் […]

அமித் சிவரஞ்சனி, பார்வதி கமருதீன், Amit Sivaranjani, Parvathi Kamarudeen Issue, YouTube Viral Video. பொழுதுபோக்கு

பார்வதி – கமருதீன் விவகாரம்: அமித்தை விளாசிய மனைவி சிவரஞ்சனி!

  • December 26, 2025
  • 0 Comments

சமீபகாலமாக யூடியூப் பக்கங்களில் பார்வதி மற்றும் கமருதீன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களின் நட்பு குறித்த வீடியோக்கள் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவர்களது தனிப்பட்ட பிரச்சனையில் சமூக வலைதள பிரபலம் அமித் கருத்து தெரிவிக்கப் போய், அது அவரது சொந்தக் குடும்பத்திலேயே புயலைக் கிளப்பியுள்ளது. பார்வதி மற்றும் கமருதீன் இடையேயான பிரச்சனையில், அமித் ஒரு தரப்பிற்கு ஆதரவாகவோ அல்லது அறிவுரை சொல்வது போலவோ சில கருத்துக்களைத் தனது வீடியோவில் பதிவிட்டிருந்தார். “அடுத்தவர் வீட்டுப் […]

error: Content is protected !!