இலங்கை செய்தி

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனம் மோதி பலி: புத்தாண்டில் சோகம்!

  • January 1, 2026
  • 0 Comments

வாகன பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரியொருவர் வேன் மோதி பலியாகியுள்ளார். மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை Ambalangoda நகரிலேயே இன்று (01) அதிகாலை 2.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பொலிஸ் அதிகாரிகள் , அம்பலாங்கொடை நகரில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வேனொன்றை நிறுத்துவதற்குரிய சமிக்ஞையை வெளிப்படுத்தினர். அவ்வேளையிலேயே இரு அதிகாரிகளையும் மோதி தள்ளிவிட்டு வேனில் சென்றவர்கள், தப்பியோடியுள்ளனர். அம்பாந்தோட்டை பகுதியை நோக்கியே குறித்த […]

அரசியல் இலங்கை செய்தி

போராட்டம் வெடிக்கும்: என்பிபி அரசுக்கு எதிரணி எச்சரிக்கை!

  • January 1, 2026
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதயில் இறங்கிப் போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJPபொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோல்வி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை. இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய கடவுச்சீட்டுகளின் விநியோக நடவடிக்கை ஆரம்பம்!

  • January 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய கடவுச்சீட்டுக்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முன் அட்டையில் மன்னர் சார்லஸின் சின்னம் பொறிக்கப்பட்ட இந்த கடவுச்சீட்டுகள் இதுவரை தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களில் மிகவும் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹாலோகிராபிக் மற்றும் ஒளிஊடுருவக்கூடிய அம்சங்கள் உட்பட மேம்பட்ட போலி எதிர்ப்பு தொழில்நுட்பத்தை இந்த கடவுச்சீட்டுக்கள் கொண்டுள்ளன. இதேவேளை ராணி எலிசபெத் II இன் சின்னம் கொண்ட கடவுச்சீட்டுக்கள் அவற்றின் காலாவதி திகதி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதித்த ஆப்பிரிக்க நாடுகள்!

  • January 1, 2026
  • 0 Comments

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடிகளின்  குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இவ்விரு நாடுகளும் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தனித்தனி அறிக்கைகளின் மூலம் இது தொடர்பில் அறிவித்துள்ளன. பரஸ்பரம் என்ற கொள்கையின்படி, மாலி குடியரசின் அரசாங்கம் மாலி குடிமக்கள் மீது […]

உலகம் செய்தி

நியூயோர்க்கின் முதல் முஸ்லிம் மேயராக மம்தானி பதவியேற்பு

  • January 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயோர்க்கின் மேயராக, 34 வயதான ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) இன்று அதிகாலை பதவியேற்றார். மேன்ஹாட்டனில் (Manhattan) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய சிட்டி ஹால் (City Hall) சுரங்க ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ரகசிய விழாவில், புனித குர்ஆன் மீது கைவைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன் மூலம் நியூயோர்க் மாநகரின் முதல் முஸ்லிம் மேயர், முதல் தெற்காசிய வம்சாவளி மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் எனப் பல […]

அரசியல் இலங்கை செய்தி

புத்தாண்டு பிறந்த கையோடு மாகாணசபைத் தேர்தலை கோருகிறது மொட்டு கட்சி!

  • January 1, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (01) விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே கட்சி செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam மேற்கண்டவாறு வலியுறுத்தினார். “நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

(BREAKING NEWS) சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து – பலர் பலியானதாக தகவல்!

  • January 1, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஸ்கை ரிசார்ட் பாரில் ஏற்பட்ட வெடி விபத்தில்  பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana)  உள்ள  பாரில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 00.30 மணிக்கு) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறான பொருள் வெடித்தது என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. சுவிஸ் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் ஒரு கட்டடம் தீப்பிடித்து எரிவதை மட்டுமே காட்டுகிறது. சம்பவ இடத்திற்கு […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அவுஸ்ரேலியாவில் சட்டவிரோத வானவேடிக்கையால் பலர் பாதிப்பு

  • January 1, 2026
  • 0 Comments

அவுஸ்ரேலியா முழுவதும் 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்ற அதேவேளை, சட்டவிரோத வானவேடிக்கை விபத்துகளால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிட்னியில் சட்டவிரோத பட்டாசு வெடித்ததில் 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெல்போர்னில் ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் போண்டா பீச் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இம்முறை சிட்னியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீண்ட தூர ஆயுதங்களை ஏந்திய பொலிஸார் ரோந்துப் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அவுஸ்ரேலிய மாட்டிறைச்சிக்கு 55 சதவீத கூடுதல் வரி அறிவிப்பு

  • January 1, 2026
  • 0 Comments

தனது நாட்டு கால்நடைத் தொழில்துறையைப் பாதுகாக்கும் நோக்கில், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு 55 சதவீத கூடுதல் வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீடு அளவைத் தாண்டும் போது, அவுஸ்ரேலியா , பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த வரி அமுல்படுத்தப்படும். இந்தத் தீர்மானம் தமக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அவுஸ்ரேலிய இறைச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் […]

அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு ஊடாக தமிழருக்கு தீர்வு! நீதி அமைச்சர் உறுதி!!

  • January 1, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்பு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார Harshana Nanayakkara தெரிவித்தார். புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பூர்வாங்க பணி இம்மாதம் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார். புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தமிழ் நாளிதழொன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். “ புதிய அரசமைப்பு இயற்றப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பயங்கரவாத […]

error: Content is protected !!