உலகம் செய்தி

தாயின் மறைவுக்குப் பிறகு வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான்

  • January 9, 2026
  • 0 Comments

முன்னாள் வங்காளதேசப்(Bangladesh) பிரதமரின் மறைவுக்கு சில நாட்களுக்குப் பிறகு வங்காளதேச தேசியவாதக் கட்சியின்(BNP) தலைவராக தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) முறைப்படி பதவியேற்றுள்ளார். “வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் கலீதா ஜியாவின்(Begum Khaleda Zia) மறைவைத் தொடர்ந்து தலைவர் பதவி காலியாகிவிட்டதால் கட்சியின் தலைவராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுள்ளார்” என்று Xல் ஒரு பதிவு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டாக்காவில்(Dhaka) உள்ள எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலீதா ஜியா தனது 80 வயதில் […]

இந்தியா செய்தி

மனைவி மற்றும் 2 மகள்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பஞ்சாப் நபர்

  • January 9, 2026
  • 0 Comments

பஞ்சாபின்(Punjab) ஃபெரோஸ்பூர்(Ferozepur) மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹர்மன் நகரில் உள்ள தங்கள் வீட்டில் 42 வயதான அமன்தீப் சிங்(Amandeep Singh) என்ற நபர், 40 வயது மனைவி ஜஸ்வீர்(Jasvir) மற்றும் அவர்களது இரண்டு மகள்களான 10 வயது மன்வீர் கவுர்(Manvir Kaur) மற்றும் 6 வயது பர்மீத் கவுர்(Parmeet Kaur) ஆகியோரை சுட்டுக் கொன்று பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும், கொலை ஆயுதமான ஒரு துப்பாக்கியை […]

உலகம் செய்தி

கல்லறையிலிருந்து மனித எச்சங்களை திருடிய அமெரிக்க நபர் கைது

  • January 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவின்(America) தென்மேற்கு பிலடெல்பியா(Philadelphia) கல்லறையில் மனித எலும்புக்கூடுகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட பென்சில்வேனியா(Pennsylvania) நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எப்ராட்டாவைச்(Ephrata) சேர்ந்த 34 வயதான ஜோனாதன் கெர்லாக்(Jonathan Gerlock) மவுண்ட் மோரியா(Mount Moriah) கல்லறையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் முதல் கல்லறை திருடப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து காவல்துறையினர் கல்லறையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், விசாரணையின் போது ​​ஜோனாதன் கெர்லாக் சுமார் 30 ஜோடி மனித எச்சங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவரது […]

இலங்கை செய்தி

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – உரிமையாளர் உயிரிழப்பு

  • January 9, 2026
  • 0 Comments

தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று  (09) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த நபர்  களுபோவில வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா செய்தி

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் மரணம்

  • January 9, 2026
  • 0 Comments

இமாச்சலப் பிரதேசத்தில்(Himachal Pradesh) தனியார் பேருந்து ஒன்று கிட்டத்தட்ட 400 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர். சிர்மௌர்(Sirmaur) மாவட்டத்தின் ஹரிபூர்தார்(Haripurdar) பகுதியில், செங்குத்தான சரிவைக் கடக்கும்போது பேருந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. மேலும், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பயணிகளில் பெரும்பாலோர் உள்ளூர்வாசிகள். அவர்கள் அருகிலுள்ள ஹரிபூர்தாரில் உள்ள […]

உலகம் செய்தி

நெதன்யாகுவை கடத்த அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

  • January 9, 2026
  • 0 Comments

வெனிசுலா(Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை(Nicolas Maduro) அமெரிக்கா(America) கடத்தியது போல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும்(Benjamin Netanyahu) அமெரிக்கா கடத்திச் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான்(Pakistan) பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்(Khawaja Asif) குறிப்பிட்டுள்ளார். மேலும், துருக்கியும்(Turkey) நெதன்யாகுவை கடத்த முடியும் என்றும் பாகிஸ்தானியர்கள் அதற்காக பிரார்த்தனை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கவாஜா ஆசிப், நெதன்யாகு “மனிதகுலத்தின் மோசமான குற்றவாளி” என்று விவரித்துள்ளார். “கடந்த 4,000-5,000 ஆண்டுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு(Palestinian) […]

இலங்கை செய்தி

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

  • January 9, 2026
  • 0 Comments

தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று  (09) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – மழை காரணமாக கைவிடப்பட்ட பாகிஸ்தான் மற்றும் இலங்கை போட்டி

  • January 9, 2026
  • 0 Comments

பிரபல பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி வருகிற 11ம் திகதி நடைபெறவுள்ளது.

உலகம்

கிரீன்லாந்தில் என்ன இருக்கிறது?

  • January 9, 2026
  • 0 Comments

பூமியின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு வளமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முக்கியமான மூலப்பொருட்களும் அடங்கும். லித்தியம் மற்றும் அரிய பூமி கூறுகள் (REEs) போன்ற முக்கியமான மூலப்பொருட்கள் உட்பட, குறிப்பிடத்தக்க ஹைட்ரோகார்பனையும் (hydrocarbon)  கொண்டுள்ளது. இந்த வளங்கள் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய ஆற்றல் மாற்றத்திற்கு மிக முக்கியமானவை. கிரீன்லாந்தின் ஹைட்ரோகார்பன் ஆற்றல் மற்றும் கனிம வளத்தின் அளவு,  குறித்து டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விரிவான ஆராய்ச்சிகளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஏஐ துறையில் உலகை வழிநடத்த இந்தியா தயாராகிறது

  • January 9, 2026
  • 0 Comments

இந்திய செயற்கை நுண்ணறிவு, அதாவது ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலகளவில் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு – உலகளாவிய தாக்கம்” என்ற உச்சி மாநாட்டை முன்னிட்டு, இந்திய ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், அவதார், பார்த்ஜென், ஃப்ராக்டல், கான், ஜென்லூப், இன்டெலிஹெல்த், சர்வம், டெக் மஹிந்திரா, ஜென்டீக் […]

error: Content is protected !!