கல்வி மறுசீரமைப்பை அமுலாக்க கோரி போராட்டம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று தொடர் அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. “தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (19) காலை முதல் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதே கோரிக்கையை முன்வைத்துப் பொலன்னறுவை மற்றும் காலி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் […]













