உலகம்

வன்முறை மூலம் கட்டமைக்கப்படும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் – ஜெர்மனி!

  • January 13, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பு அரசாங்கத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக ஜெர்மனி விமர்சித்துள்ளது. ஈரானின் ஆட்சி அதன் “இறுதி நாட்கள்களில் இருப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) கூறியுள்ளார். வன்முறை மூலம் மட்டுமே ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும் என்றால், அந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் தற்போது இடம்பெற்று போராட்டங்களில் அமெரிக்கா தலையிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்: ‘வெறுப்புணர்வு’ குழுக்களுக்குத் தடை

  • January 13, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் மத மற்றும் இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் அமைப்புகளைத் தடை செய்யும் புதிய சட்டவரைவை தொழிலாளர் கட்சி அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு அமைப்பை ‘வெறுப்புணர்வு குழுவாக’ (Hate Group) அறிவிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் அவுஸ்திரேலிய பாதுகாப்பு உளவு அமைப்பான ‘ஏசியோ’ (ASIO) தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் உறுப்பினராக இருப்பதோ அல்லது அவர்களுக்கு ஆதரவளிப்பதோ கடும் குற்றமாகக் கருதப்படும். இத்தகைய அமைப்புகளை வழிநடத்துபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அடுத்த தேர்தல் : கன்சர்வேடிவ் – சீர்திருத்த UK இணைகிறதா?

  • January 13, 2026
  • 0 Comments

அடுத்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியை தோற்கடிப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சியும் சீர்திருத்த யுகே கட்சியும் இணக்க நிலைக்கு வரலாம் என சீர்திருத்த UK கட்சியின் உறுப்பினர் நடின் டோரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் மனநிலை வலதுபுறமாக நகர்வதை கருத்துக்கணிப்புகள் தெளிவாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் வாக்குகளும் சீர்திருத்த UK கட்சியின் வாக்குகளும் இணைந்தால், சக்திவாய்ந்த அரசியல் பலமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். இடதுசாரிகளை ஆட்சியில் இருந்து விலக்குவதற்காக, இரு கட்சிகளுக்கும் இடைய உடன்பாடொன்று எட்டப்படலாம் என்றும் […]

உலகம் செய்தி

டொனால்ட் ட்ரம்ப்பின் 10 பில்லியன் டொலர் வழக்கு: நீதிமன்றத்தை நாடிய பிபிசி

  • January 13, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்த 10 பில்லியன் டொலர் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, பிபிசி (BBC) நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 2021-ம் ஆண்டு கேபிடல் கலவரத்தின் போது ட்ரம்ப் ஆற்றிய உரையை, பிபிசியின் ‘பனோரமா’ நிகழ்ச்சி தவறாகத் தொகுத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வெவ்வேறு நேரங்களில் பேசிய வார்த்தைகளை ஒன்றாக இணைத்து, வன்முறையைத் தூண்டியது போன்ற தோற்றத்தை பிபிசி உருவாக்கியதாக ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்கனவே பிபிசி மன்னிப்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவுக்கு போர் அபாயம்? ; ராணுவத் தளபதி எச்சரிக்கை

  • January 13, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் போர் மூண்டால் நாட்டைப் பாதுகாக்க பிரித்தானியாவிடம் முறையான ‘தேசிய பாதுகாப்புத் திட்டம்’ இல்லை என்று அந்நாட்டின் ராணுவத் தளபதி பகிரங்கமாக எச்சரித்துள்ளார். குறிப்பாக, போர்க்காலங்களில் காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தேசிய சுகாதார சேவையை (NHS) எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவான வரைபடங்கள் ஏதுமில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு கைவிடப்பட்ட ‘அரசு போர் கையேடு’ (Government War Book) போன்ற வழிகாட்டிகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. நிதிப் பற்றாக்குறையே இந்த […]

ஐரோப்பா

ரஷ்யாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்ற முனைப்பு காட்டும் பிரித்தானியா!

  • January 13, 2026
  • 0 Comments

விளாடிமிர் புடின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க பிரித்தானியாவின் சிறப்பு படைகள் ரஷ்ய நிழல் கடற்படையின் எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர்கள் புதிய சட்ட காரணங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தடைகள் மற்றும் பணமோசடி சட்டத்தின் (2018) கீழ் நாடற்றதாகக் கருதப்படும் கப்பல்களை குறிவைப்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை இதற்கு முன்னதாக வட அட்லாண்டிக்கில் மரைனேரா (Marinera) டேங்கரைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்க நடவடிக்கைக்கு இங்கிலாந்து ஆதரவளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

“தரம் 6” கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு! பின்னணி என்ன?

  • January 13, 2026
  • 0 Comments

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. உரிய மீளாய்வுகளின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார். எனினும், தரம் 1 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் எனவும் அமைச்சர் கூறினார். “ தரம் […]

ஐரோப்பா

லண்டனில் அமைக்கவுள்ள சீன தூதரகத்திற்கு எதிர்ப்பு : எம்.பிகள் கூட்டாக வலியுறுத்தல்!

  • January 13, 2026
  • 0 Comments

லண்டனில் அமைக்க உள்ள சீன தூதரகத்தை நிராகரிக்குமாறு தொழிற்கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் 09 எம்.பிகள் சமூக செயலாளர் ஸ்டீவ் ரீடிற்கு ( Steve Reed) கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். பிரதமர் சீனாவிற்கு  பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக தூதரகத்தை அங்கீகரிப்பதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே  மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.

இலங்கை செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள்: தகவல் உண்மையா?

  • January 13, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற வளாகத்தில் ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற செயலகத்தால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. “ நாடாளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள் (ஐஸ்), மதுபானம் மற்றும் சிகரெட் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சபாநாயகர ஜகத் விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்” – என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தே இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும், அவ்வாறான ஆலோசனைகளையும் சபாநாயகர் வழங்கி இருக்கவில்லை எனவும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியா – இஸ்ரேல் உறவில் கடும் விரிசல்

  • January 13, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. ஆஸ்திரேலிய பிரதமர்மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கு ஆஸ்திரேலியா எடுத்த தீர்மானத்தின் பிரதிபலன் இது என இஸ்ரேல் குற்றஞ்சாட்டி இருந்தது. அதேவேளை, ஆஸ்திரேலியா வருமாறு இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை அவர் ஏற்றிருந்தாலும், இதற்கு இடமளிக்க கூடாது என ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் விடயத்தில் […]

error: Content is protected !!