அரசியல் இலங்கை செய்தி

மத்திய கிழக்கு பதற்ற நிலை விரைவில் சீராகும்: இலங்கை நம்பிக்கை!

  • March 4, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை விரைவில் சீராகும் என நம்புகின்றோம். சிலவேளை நீடித்தால்கூட அதனால் மீனவர்களுக்கு தாக்கம் ஏற்படடாத வகையில் உரிய தலையீடு மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு கடற்றொழில், நீரில் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, “ ஒரு மாத காலத்துக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்பின்னரும் நெருக்கடி ஏற்பட்டால் மீனவர்களுக்கு […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரானை எதிர்க்கிறது ஆஸ்திரேலியா: மத்திய கிழக்கில் 6 குழுக்கள் களமிறக்கம்!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரில் ஆஸ்திரேலியா நேரில் பங்கேற்காவிட்டாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டிலேயே அந்நாட்டு அரசாங்கம் உள்ளது. ஈரான் உச்ச தலைவரின் மரணத்துக்குகூட ஆஸ்திரேலியா அனுதாபம் தெரிவிக்கவில்லை. அதேபோல உச்ச தலைவருக்கு சில மசூதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஆஸ்திரேலியர்களுக்கு உதவும் வகையில் ஆறு அவசரகால உதவிக் குழுக்களை அந்நாட்டு அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. வான்வழிப் போக்குவரத்து முடக்கத்தால் […]

இலங்கை செய்தி

வடக்கில் கண்ணிவெடி அகற்றல்: நோர்வேயின் ஒத்துழைப்புக்கு சஜித் நன்றி தெரிவிப்பு!

  • March 4, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் Sajith Premadasa மற்றும் இலங்கை வந்துள்ள நோர்வே நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் Andreas Gravic ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்புநேற்று (03) பிற்பகல் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு மூலோபாயங்கள் முன்வைக்கப்பட்டன. டித்வா சூறாவளிப் பாதிப்பின் போது CERF, WFP மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக நோர்வே வழங்கிய 24 மில்லியன் நோர்வே குரோனர் (NOK) மதிப்பிலான உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியைத் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கை நாடாளுமன்றில் இரு நாள் விவாதம்!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தலைவர் Sajith Premadasa கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (03) ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் உரையாற்றுகையிலேயே Sajith Premadasa ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் இலங்கைக்கு நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் அவசியம். இதற்கான அழைப்பை கட்சி பேதமின்றி அனைத்து தரப்புகளுக்கும் […]

உலகம் செய்தி

ஈரானின் ஜனாதிபதி அலுவலகம் உட்பட முக்கிய வளாகங்களில் தாக்குதல்

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில், ஜனாதிபதி அலுவலகம் உட்பட முக்கிய வளாகங்களில் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அத்துடன் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய நிலவரப்படி ஆறு அமெரிக்க சேவை உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை ஈரானின் பதிலடி தாக்குதல் நடவடிக்கை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் லெபனானில் […]

இலங்கை செய்தி

” உலக பொருளாதாரத்துக்கும், மனித இருப்புக்கும் அச்சுறுத்தல்”

  • March 3, 2026
  • 0 Comments

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்திற்கும், மனித வாழ்வின் இருப்புக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் என்ற வகையில் சிறந்ததை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி அநுர […]

இந்தியா செய்தி

போர் பதற்றத்தால் இந்திய பொருளாதாரம் அழுத்தத்தில்

  • March 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால், இந்திய பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற சூழல், இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நீடித்த மோதல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்திய அரசின் நிதிநிலைக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்து கிடைக்கும் வருவாயும் குறைந்தால் இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் […]

இலங்கை செய்தி

205 விமான சேவைகள் இரத்து

  • March 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக இதுவரை 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார். விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை குறித்து அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி நாட்டுக்கு வரவிருந்த 107 விமானங்களும் புறப்படவிருந்த 98 விமானங்களுமாக மொத்தம் 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் தங்கியுள்ள […]

புகைப்பட தொகுப்பு

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்

  • March 3, 2026
  • 0 Comments

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் திருமண நிகழ்வின் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்த நிலையில் இரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் திருமண கொண்டாட்ட நிகழ்வுகளை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.    

இலங்கை செய்தி

இலங்கை வருமாறு பாப்பரசருக்கு அழைப்பு!

  • March 3, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைட்டா பிளாஜ் அருட் தந்தையை(Msgr. Mihăiță Blaj) சந்தித்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்தார்.

error: Content is protected !!