இலங்கை செய்தி

பெருந்தோட்ட அமைச்சுக்கு புதிய செயலர் நியமனம்!

  • March 9, 2026
  • 0 Comments

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார். குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

இலங்கை செய்தி

ஜனாதிபதியை சந்தித்தார் தம்மாலங்கார தேரர்!

  • March 9, 2026
  • 0 Comments

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி, தேரருடன் சிறு உரையாடலை மேற்கொண்டதுடன், அரசாங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஜனாதிபதிக்கு தேரர் தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்தார். கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா […]

ஐரோப்பா செய்தி

தீவிரவாதத்தை எதிர்க்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்

  • March 9, 2026
  • 0 Comments

  சமூக ஒற்றுமைத் திட்டம் என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தி, சிறுவர்களை பிரிவினை மற்றும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கவும், தீவிரவாதத்தை எதிர்க்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிகரிக்கும் வெறுப்பு, குற்றங்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களை கருத்திற்கொண்டு, சமூகங்களுக்குள் உள்ள பிளவுகளை எதிர்கொள்ள கவுன்சில்கள் மற்றும் அடிமட்ட அமைப்புகளை ஆதரிக்க £5 பில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் குடியேற விரும்பும் அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியா பல […]

ஐரோப்பா செய்தி

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணியின் அமெரிக்க பயணத்தை பிரதமர் தடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

  • March 9, 2026
  • 0 Comments

  மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவின் ( Camilla) அடுத்த மாத அமெரிக்க பயணத்தை பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தடுக்க வேண்டும் என லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்ததால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள இந்த அரசு பயணம் அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பது நோக்கமாக கொண்டது என்றும் கூறப்படுகிறது. […]

ஐரோப்பா

ஈரான் போர் நீடித்தால்: பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஆபத்து – கீர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

  • March 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று லண்டனில் உள்ள ஒரு சமூக மையத்திற்கு (Community Centre) வருகை தந்து உரையாற்றினார். அப்போது, ஈரானில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் நீடித்தால், அது பிரித்தானியாவின் ஒவ்வொரு குடும்பத்தையும் மற்றும் வணிகத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ள நிலையில், “இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அந்த அளவிற்கு நமது பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு […]

ஐரோப்பா செய்தி

இராணுவம் எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை பிரதமரே தீர்மானிப்பார் – ட்ரம்புக்கு ஸ்டாமர் பதில்

  • March 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய இராணுவம் எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பிலான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு பிரித்தானிய பிரதமரையே சார்ந்தது என ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கு தொடர்பான நிலைப்பாட்டுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வார இறுதியில் பிரதமரை மீண்டும் விமர்சித்ததைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்குக்கு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து பிரித்தானியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ஏற்கனவே வெற்றி பெற்ற பிறகு போரில் இணையும் நாடுகள் […]

இலங்கை செய்தி

பிள்ளையானுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • March 9, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இன்று (09) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இம்மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி பயங்கரவாதத் […]

உலகம்

G7 நாடுகளின் அவசர ஆலோசனை: உலகப் பொருளாதாரத்தில் பதற்றம்

  • March 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரு கட்டத்தில் 25% உயர்ந்து ஒரு பேரல் 119.50 டாலரை எட்டியது. பின்னர் இது 100 டாலராகக் குறைந்தது. இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க G7 (Group of Seven) நாடுகளின் நிதி அமைச்சர்கள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலா?

  • March 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் எண்ணெய் விநியோகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென வீட்டுவசதி செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed), கூறியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் அவர் இதனை அறிவித்துள்ளார். கடந்த 24 மணித்தியாலங்களில் எண்ணெய் விலை, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாதளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை என்றும் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் ஸ்டீவ் ரீட் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம்

பாரிய தீ பரவல்: Glasgow மத்திய ரயில் நிலைய சேவைகள் ரத்து!

  • March 9, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்தின் மிகவும் பரபரப்பான கிளாஸ்கோ மத்திய ரயில் நிலையம் Glasgow Central Station தற்காலிகமாக மூடப்பட்டது. ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. யூனியன் தெருவில் உள்ள ஒரு கடையில் தொடங்கிய இந்த தீ, அருகிலுள்ள பழமையான கட்டிடங்களுக்கு பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தீயணைப்பு படையினர் […]

error: Content is protected !!