இலங்கை செய்தி

சுதந்திர தின விழாவுக்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு!

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. சுதந்திர தின விழா “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு நடைபெறும். இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிதுறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் ஊடக சந்திப்பில் […]

உலகம் செய்தி

ஈரானில் அதிகரித்து வரும் நெருக்கடி – மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்’!

  • January 29, 2026
  • 0 Comments

ஈரானில் அதிகரித்து வரும் நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்ரேலிய மற்றும் சவுதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று அழைப்பு விடுத்துள்ளார். தெஹ்ரானுடனான பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில் சவுதி அரேபியாவின் தூதுக்குழுவொன்று அமெரிக்காவிற்கு தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ட்ரம்ப் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே ஈரானுக்குள் இருக்கும் சாத்தியமான இலக்குகள் குறித்த உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் வொஷிங்டன் டிசியில் உள்ளனர். அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முழு அளவிலான போராக […]

இலங்கை செய்தி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு – ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

  • January 29, 2026
  • 0 Comments

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை வெள்ளிக்கிழமை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக 200 ரூபாய் […]

ஐரோப்பா

1,000 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் ஒப்படைத்த ரஷ்யா!

  • January 29, 2026
  • 0 Comments

கைதிகள் பறிமாற்றத்தின் ஒரு பகுதியாக  1,000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனுக்கு அனுப்பிவைத்துள்ளதாக   கியேவ் (Kyiv) தெரிவித்துள்ளது. இதற்கு பிரதியீடாக  38 உடல்களை ரஷ்யா பெற்றதாக மொஸ்கோவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி (Vladimir Medinsky) கூறினார். உடல்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வெள்ளை குளிர்சாதன பெட்டிகளும், அதற்கு அருகில் பயோஹசார்ட்  (biohazard) உடைகள் அணிந்த நபர்கள் நிற்பதைக் காட்டும் ஒரு புகைப்படத்தையும் மெடின்ஸ்கி வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால மோதலின் போது கியேவ் மற்றும் […]

இந்தியா

முழு அரச மரியாதையுடன் அஜித் பவாரின் உடல் தீயுடன் சங்கமம்!

  • January 29, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெற்றது. பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அஜித் பவாரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அஜித் பவாரின் மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் தங்கள் தந்தையின் சிதைக்கு தீ மூட்டினர். இறுதிச் சடங்கில் […]

இலங்கை செய்தி

சுதந்திர தின ஒத்திகை – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

  • January 29, 2026
  • 0 Comments

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா (ஓய்வுபெற்ற) தெரிவித்துள்ளார். 78 ஆவது தேசிய சுதந்திர தின விழா குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் முப்படையைச் சேர்ந்த 234 அதிகாரிகளும், 3323 ஏனைய தரப்பினரும், தேசிய மாணவர் படையணியின் 12 […]

ஐரோப்பா

புயல் கரையை கடந்த பின்னும் பிரித்தானியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!

  • January 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை தாக்கிய சந்திரா புயலை தொடர்ந்து வெப்பநிலை சற்று உயர்ந்துள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பின்படி, இங்கிலாந்து முழுவதும் 76 வெள்ள எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அத்துடன் 60 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இங்கிலாந்தின் தென்மேற்கில் கனமழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் மஞ்சள்  எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக பயண இடையூறுகள் ஏற்படும் என்றும் அதிகாரிகள் முன்னறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

தென்னாப்பிரிக்காவில் பேருந்து ஒன்றுடன் மோதிய லொறி – 11 பேர் பலி!

  • January 29, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் சிறிய பேருந்து ஒன்று, லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் கிழக்கு குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில் உள்ள டர்பன் (Durban) அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜோகன்னஸ்பர்க் அருகே ஒரு லொறி மற்றும் மினிபஸ் டாக்ஸி மோதிய விபத்தில் 14 பாடசாலை மாணவர்கள்  கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த விபத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலை அமைக்க ஏற்பாடு!

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை National Film School ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தலைமையில் agath Manuwarna நடைபெற்ற கூட்டத்திலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்னவும் Dr. Kaushalya Ariyaratne கலந்துகொண்டார். அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் […]

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா நாட்டிற்கு வருகை

  • January 29, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அடுத்த மாதம்  நாட்டிற்கு வருகை தரவுள்ளார். டிட்வா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள IMF பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே, அதன் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இதனை உறுதிப்படுத்தினார். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் வெற்றியை ஆராய்வதற்காக அவர் நாட்டிற்கு வருகை தருகிறார். , IMF இன் தொடர்ச்சியான […]

error: Content is protected !!