இலங்கை செய்தி

அம்பாறையில் துப்பாக்கி சூடு – பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட நால்வர் பலி

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நாமல் ஓயா பகுதியில் உள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரினால் இத்துப்பாக்கிச் சூடு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கினியாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சக பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டு படுகொலை செய்த பின்னர் இங்கினியாகல நெல்லியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மனைவி மற்றும் மகள் ஆகியோரை சுட்டுக்கொன்ற பின்னர் தனது துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதா அல்லது இதர காரணங்களினால் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!