வட அமெரிக்கா

ஒவ்வொரு கனேடியரும் பாதுகாப்பாக வாழ வேண்டும் – பிரதமர் ஜஸ்ட்டின்

கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதத் தலைவரின் படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ முதல் முறையாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தக் கொலையால் சீக்கிய சமூகத்தினரிடையே அச்சம் நிலவுவதை நான் அறிவேன். பாகுபாடு, அச்சுறுத்தல், வன்முறை இல்லாமல் பாதுகாப்பாக வாழும் அடிப்படை உரிமை ஒவ்வொரு கனேடிய குடிமகனுக்கும் உள்ளது.

சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அந்தக் கொலையின் தொடர்பில் இந்திய நாட்டவர் மூவரைக் கனடிய பொலிஸார் அண்மையில் கைதுசெய்தனர்.

இந்திய அரசாங்கத்துடன் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதாகவும் கனடா கூறியது.

அந்த விசாரணைக்குப் புதுடில்லி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்