இலங்கை

இலங்கையில் அதிகாலையில் நடந்த விபத்து – 37 பேர் காயம்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை – டொப்பாஸ் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்தில் 42 பேர் பயணித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 77 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்