வவுனியாவில் நூதனமான முறையில் போதைப் பொருள் வியாபாரம்!! தாய் மற்றும் மகள்கள் கைது
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வவுனியா பகுதியில் தாய் மற்றும் இரண்டு இரட்டை மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இரு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும், இந்த மோசடியில் முக்கிய கடத்தல்காரரான இவர்களின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தப் பெண்கள் நடத்தும் டயர் கடையில் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் டயர் கடையில் இருந்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





