செய்தி தமிழ்நாடு

பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் புறப்பட்டு புதுக்கோட்டை சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் பட்டா கேட்டு மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றிய முழுவதும் அரசு புறம்போக்கு இடங்களில் பல்லாண்டு காலம் வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் வகை மாற்றம் செய்து பட்ட வழங்க கோரியும் ஒரே வீட்டுக்குள் கூட்டுக் குடும்பமாக கூடியிருந்து வரும் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க கோரியும் அரசு புறம்போக்கு நிலத்தில் பல்லாண்டு காலம் உழது அனுபவம் செய்து ஒரு நிலத்திற்கு நிலப்பட்ட வழங்க கோரியும்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட் சார்பில் கந்தர்வகோட்டை வட்டச் அலுவலகத்தில் மனு கொடுத்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர் உடனடியாக தாசில்தார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடியாக குடியிருந்த 20நபர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

மீதம் உள்ள மனுக்களை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர் இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

வேறு ஏதும அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!