இலங்கை செய்தி

அடையாள அட்டையில்லாமல் வாக்களிக்க முடியாது

வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், செல்லுபடியாகும் விமான அனுமதிப்பத்திரம், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும்  மதகுருமார்களுக்கு, மதகுரு அடையாள அட்டை இருக்க வேண்டும்.

உங்களிடம் அடையாள அட்டை இல்லை என்றால், உங்களிடம் தற்காலிக அடையாள அட்டை இருக்க வேண்டும்.

இல்லையெனில், தேர்தல் அலுவலகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டையைப் பெற வேண்டும்.

செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லை என்றால், உடனடியாக ஏதேனும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 21ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 13000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!