இலங்கை

இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 16 தங்க பிஸ்கட்டுகளுடன் தொழிலதிபர் கைது

சுமார் ரூ.43 மில்லியன் பெறுமதியான பதினாறு (16) தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த காலியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் இந்த தங்கம் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 08 பிஸ்கட்கள் அடங்கிய இரண்டு பொதிகளில் தங்கத்தை பொதி செய்து பக்கவாட்டு பையில் மறைத்து வைத்து தனது பயணப் பொதியின் கீழ் வைத்துள்ளார்.

டிராலியுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!