இந்தியா

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் கிடைத்த கௌரவம்!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி  இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

73 வயதான அவர், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான என்ஆர் நாராயண மூர்த்தியின் மனைவியாவார்.

இந்தியாவின் மேலவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனாதிபதியின் அறையில் பணியாற்ற 06 பேர் பரிந்துரைக்கப்படுவார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்படுபவர்கள் பெரும்பாலும் உயர் சாதனையாளர்களாக காணப்படுவர்.

இதன் அடிப்படையிலேயே சுதா மூர்த்தி ஆறுவருடம் பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இது குறித்து X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருமதி மூர்த்தியின் “சமூக பணி, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!