இலங்கை

ஆயுத விநியோகம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தல்!

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விநியோகிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவருமாறு பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இடையிலான சந்திப்பு இன்று (13.09) இடம்பெற்றுள்ள நிலையில் பிரித்தானியா மேற்படி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர், ரஷ்யாவுடனான ஆயுதப் பேச்சுவார்த்தையை நிறுத்துமாறும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கக் கூடாது என்று பியாங்யாங் செய்துள்ள பொது உறுதிமொழிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளார்.

“இந்தப் பயணம் உலக அரங்கில் ரஷ்யாவின் தனிமைப்படுத்தலை முன்னிலைப்படுத்த உதவுகிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் புடினின் உக்ரைன் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் ஒன்றுபடுவதால் அவர் வடகொரியாவுடன் ஒன்றிணைய வழிவகுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்