லெபனானில் இடிந்து விழுந்த அடிக்குமாடிக் குடியிருப்பு – 09 பேர் பலி!
லெபனானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் வடக்கு நகரமான திரிபோலியில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் 08 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கை முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய மேலும் 6 பேர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.





