தமிழகத்தில் அதிமுக அடிமை ஆட்சி அமைய கூடாது – உதயநிதி
தமிழகத்தில் அதிமுக அடிமை ஆட்சி அமைய கூடாது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8,000 ரூபா பெறுமதியான கூப்பன் வழங்கப்படும் என்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
அதில் வீட்டுக்கு தேவையான இலத்திரனியல் சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





