இலங்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவில் இருந்து வீசிய காற்றின் தாக்கம் காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் குறைவாக இருந்தது.

குருநாகல், கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம், மொனராகலை, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்திருந்தது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளுக்கமைய நேற்று காலை 8.30 மணியளவில், குருநாகல் நகரத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, தூசி துகள்களின் அளவு (Pm 2.5) 275 ஆக மிக அளவை காட்டியது.

மேலும், அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண்ணுக்கமைய, கொழும்பு 07 மற்றும் கொள்ளுப்பிட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தின் தரம் குறைந்துள்ளது.

இதன்படி கொள்ளுப்பிட்டி பகுதியில் 107 ஆகவும் கொழும்பு 07 இல் 141 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை உடல் பலவீனமானவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

(Visited 19 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content