இலங்கை செய்தி

இலங்கை ஆண்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

இலங்யைில் பெண்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அது தொடர்பில் முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு வயதுவந்த ஆண்களுக்கும் உரிமை உள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும் போது பெண்களினால் ஆண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

1995 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தண்டனைச் சட்டத் திருத்தச் சட்டத்தின் 345ஆவது பிரிவின்படி இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆண், பெண் என்ற வேறுபாட்டை கருத்திற் கொள்வதில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆண்களோ அல்லது சிறுவர்களோ பெண்களால் ஏதேனும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும்படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!