எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 32 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் இருந்து புத்தாளம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் 4 நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்
கைது செய்யப்பட்ட 32 மீனவர்களும் இலங்கை கற்பிட்டி கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மீனவர்கள் 32 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
(Visited 22 times, 1 visits today)