ஐரோப்பா செய்தி

வேல்ஸின் தலைநகர் கார்டிஃப்பின் 70 ஆவது பிறந்த நாள்

  • December 20, 2025
  • 0 Comments

வேல்ஸின் தலைநகராக கார்டிஃப் (Cardiff) அறிவிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நகரத்தில் மறைந்திருக்கும் வரலாற்றுச் சுவடுகள் மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரயில்வே பாலங்களில் உள்ள குண்டுத் துளைகள் முதல் நிலத்தடி பதுங்கு குழிகள் வரை, கார்டிஃப் ஒரு வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றை தன்னகத்தே கொண்ட நகரமாக உள்ளதென தெரிவிக்கப்படுகிறது. நவீன காலத்தின் நகர வளர்ச்சிக்கிடையிலும், அதனை உருவாக்கிய கடந்தகாலக் கதைகளின் சாட்சிகள் இன்னும் பல இடங்களில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் […]

உலகம் ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் பயணங்களில் கடும் நெரிசல்: 37 மில்லியன் வாகனங்கள் வீதியில் இறங்க வாய்ப்பு

  • December 20, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படும் என RAC அமைப்பு எச்சரித்துள்ளது. டிசம்பர் 25-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 37.5 மில்லியன் பொழுதுபோக்கு பயணங்கள் மேற்கொள்ளப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 8 மில்லியன் பயணங்கள் அதிகமாகும். 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் பரபரப்பான கிறிஸ்துமஸ் முந்தைய காலமாக இது அமையவுள்ளது. வானிலை சீராக இருந்தாலும், குளிர் மற்றும் மூடுபனி காரணமாக பயணங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்காக களமிறங்கும் இந்தியா: ஜெய்சங்கரிடம் மோடி அனுப்பும் செய்தி என்ன?

  • December 20, 2025
  • 0 Comments

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், இது விடயத்தில் இந்தியா முக்கிய வகிபாகத்தை வகிக்குமென தெரியவருகின்றது. தனது இலங்கை பயணத்தின்போது கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடனேயே எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகின்றார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதன் முதலில் இந்தியாவே நேசக்கரம் நீட்டியது. மீட்பு […]

உலகம் செய்தி

சிரியாவில் உள்ள ISIS அமைப்பின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ட்ரம்ப்

  • December 20, 2025
  • 0 Comments

சிரியாவின் பால்மைரா உநகரில் இரண்டு அமெரிக்க வீரர்களும்மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சிரியாவில் உள்ள ISIS (ISIL) பயங்கரவாத அமைப்பை இலக்கவைத்து அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வட கரோலினா மாநிலத்தின் ராக்கி (Rocky)மவுண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தங்கள் மூன்று தேசபக்தர்களை கொலை செய்த பயங்கரவாதிகள் மீது பெரும் தாக்குதலுக்கு தான் உத்தரவிட்டதாகவும் டரம்ப் இதன்போது […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

AI தொழில்நுட்பத்தின் வருகையால் சிந்திக்கும் ஆற்றலை இழக்கும் மனிதர்கள்?

  • December 20, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வருகை பல்வேறு வகையில் சமூகங்களில்  தாக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் தற்போது புதிய ஆய்வொன்று மனிதர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது ஏஐ தொழில்நுட்பத்தின் துணையுடன் மனிதர்கள் தங்கள் வேலைகளை இலகுவாக முன்னெடுத்துச் செல்வதால் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைவடைந்து வருவதை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாசசூசெட்ஸ் (Massachusetts) தொழில்நுட்ப நிறுவனம் (MIT) ஒரு ஆய்வை வெளியிட்டது. இது கட்டுரைகளை எழுத ChatGPT ஐப் பயன்படுத்தியவர்களின் மூளை […]

உலகம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சர்ச்சைக்குரிய சொற்றொடரை தடை செய்யும் ஆஸ்திரேலியா!

  • December 20, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தை தொடர்ந்து “இன்டிஃபாடாவை உலகமயமாக்கு” என்ற சொற்றொடரை தடை செய்ய போண்டி கடற்கரை அமைந்துள்ள மாநிலம்  நடவடிக்கை எடுத்துள்ளது. நியூ சவுத் வேல்ஸின்  (NSW)  பிரதமர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns), தாக்குதல் குறித்து விசாரணை செய்ய ஒரு ரோயல் கமிஷனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாக நம்பப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள், கடந்த ஞாயிற்றுக்கிழமை போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தினர்.  இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். […]

ஐரோப்பா செய்தி

காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது – பெரும் சோகத்தில் பிரித்தானிய மக்கள்

  • December 20, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு காய்ச்சல் பருவம் குறித்து பிரித்தானிய மக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது. பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை அமைப்பும் இந்த ஆண்டு காய்ச்சலை “சூப்பர் ஃப்ளூ”, இதுவரை இல்லாத அளவிலான பரவல் என கூறினாலும், மருத்துவ நிபுணர்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் சாதாரண காய்ச்சல் பருவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கத்தில், கடந்த ஒரு தசாப்தத்தில் […]

இந்தியா செய்தி

இஸ்ரோ வரலாற்றிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோள்: எல்விஎம் 3 மூலம் விண்ணில் பாய்கிறது

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் ‘புளூபோர்ட்-6’ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை எதிர்வரும் டிசம்பர் 24-ஆம் திகதி விண்ணில் ஏவவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எல்விஎம் 3 ரக ராக்கெட் மூலம் காலை 8.55 மணிக்கு இந்த ஏவுதல் நடைபெறவுள்ளது. 6,500 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக 5G இணையதள சேவைகளை வழங்க உதவும் இந்தத் திட்டம், இஸ்ரோவின் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில்  மின் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

  • December 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்து மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பேட்டரிகள் தொடர்பாக பல தீ விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கேம்பிரிட்ஜ்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்வாறான சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் புதிய கட்டுமான விதிமுறை மாற்றங்களுக்குப் எதிர்ப்பு

  • December 20, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் புதிய கட்டுமான வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட அணுகல் வசதிகளைக் கட்டாயமாக்கும் இலக்குகளில் அரசாங்கம் பாரிய குறைப்புகளைச் செய்துள்ளது. அனைத்து புதிய வீடுகளும் மேம்பட்ட தரநிலைகளுடன் கட்டப்பட வேண்டும் என்ற முந்தைய அரசின் 100 சதவீத உறுதிப்பாட்டை மாற்றி, தற்போது அதனை 40 சதவீதமாகக் குறைப்பதாகப் புதிய திட்டமிடல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மாற்றுத்திறனாளிகளைச் சமூகத்திலிருந்து ஒதுக்கும் செயல் என்றும், ஏற்கனவே இருந்த கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்குவது “நம்பமுடியாதது” என்றும் உரிமைப் போராட்டவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!