அரசியல் இலங்கை செய்தி

இன்னும் பாடம் கற்காத இலங்கை! ஜெய்சங்கரிடம் சஜித் கூறியது என்ன?

  • December 24, 2025
  • 0 Comments

“ சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்கத் தவறியதாலேயே, டித்வா சூறாவளியில் (ditwa cyclone) அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் (Opposition Leader) சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் (Dr. S. Jaishankar) நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்த ‘சாகர் பந்து’ (Sagar Bandhu) திட்டத்துக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் பௌத்தர்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: மஹிந்த அணி வலியுறுத்து!

  • December 24, 2025
  • 0 Comments

தெற்கில் இந்து மக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கு இருக்க வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) உறுப்பினரான முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த (Indika Anuruddha) தெரிவித்தார். மொட்டு கட்சி (SLPP) தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் டயஸ்போராக்களை (diaspora) திருப்திபடுத்துவதற்காக […]

அரசியல் இலங்கை செய்தி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க தமிழ்க் கட்சிகள் போர்க்கொடி!

  • December 24, 2025
  • 0 Comments

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப்படுவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Dr. Harini Amarasooriya) நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம் நேர்காணலொன்றின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் வழங்கிய பதில் வருமாறு, “ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி (executive presidency) முறைமையை […]

உலகம் செய்தி

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியாவின் ராணுவத் தலைவர் மரணம்

  • December 23, 2025
  • 0 Comments

துருக்கியின்(Turkey) தலைநகரான அங்காராவிலிருந்து(Ankara) லிபியாவின்(Libya) இராணுவத் தலைவர் மற்றும் நான்கு பேரை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் பிராந்திய பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக லிபிய இராணுவத் தலைவர் அங்காராவில் இருந்ததாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், லிபிய பிரதமர் அப்துல்-ஹமீத் திபீபா(Abdul-Hamid Tibiba), ஜெனரல் முகமது அலி அகமது அல்-ஹதாத்(Mohammed Ali […]

உலகம் செய்தி

ரியாத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மிகப்பெரிய திருமண நிகழ்வு

  • December 23, 2025
  • 0 Comments

டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ரியாத்தில்(Riyadh) உள்ள என்சான்(Ensan) அறக்கட்டளையின் ஆதரவின் கீழ் மொத்தம் 282 ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ரியாத் ஆளுநர் இளவரசர் பைசல் பின் அப்துல்அஜிஸ்(Faisal bin Abdulaziz) மற்றும் அவரது மனைவி இளவரசி நூரா பின்த் முகமது(Noura bint Mohammed) ஆகியோரின் தலைமையில் அடுத்த வாரம் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. பயனாளிகள் நிலையான குடும்பங்களை கட்டியெழுப்ப உதவும் தொண்டு நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் கைது செய்யப்பட்ட ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் விடுதலை

  • December 23, 2025
  • 0 Comments

லண்டனில்(London) பாலஸ்தீன(Palestinian) ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட ஸ்வீடிஷ்(Swedish) ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்(Greta Thunberg) விடுவிக்கப்பட்டதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனை தளமாகக் கொண்ட பாலஸ்தீனத்திற்கான கைதிகள் பிரச்சாரக் குழு, “பாலஸ்தீன நடவடிக்கை கைதிகளை நான் ஆதரிக்கிறேன். இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்ததற்காக துன்பெர்க் முன்னதாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தது. 22 வயதான கிரேட்டா துன்பெர்க், 2018ல் ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தின் முன் வாராந்திர காலநிலை போராட்டங்களை நடத்திய […]

உலகம் செய்தி

ஏமன் மற்றும் ஹவுதி இடையே கையெழுத்தான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்

  • December 23, 2025
  • 0 Comments

ஏமன்(Yemen) அரசாங்கமும் ஹவுதி(Houthi) குழுவும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2014ல் தொடங்கிய அரசாங்கத்திற்கும் ஹவுத்திகளுக்கும் இடையிலான மோதலில் ஒரு மத்தியஸ்தராக இருந்த ஓமானின்(Oman) தலைநகரான மஸ்கட்டில்(Muscat) கிட்டத்தட்ட இரண்டு வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நிறைவு பெற்றதாக ஏமனுக்கான ஐ.நா. தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க்(Hans Grundberg) தெரிவித்துள்ளார். இந்நிலையில், மஸ்கட்டில் உள்ள ஹவுதி தூதுக்குழுவின் அதிகாரி அப்துல்காதர் அல்-மோர்டாடா(Abdulqader al-Mortada),” 1,700 பேரை உள்ளடக்கிய […]

இந்தியா செய்தி

வங்கதேச படுகொலைகளை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இந்தியர் கைது

  • December 23, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறி அசாமின்(Assam) கம்ரூப்(Kamrup) மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய பஜ்ரங்(Rashtriya Bajrang) மற்றும் சர்வதேச இந்து பரிஷத் பஜ்ரங்(International Hindu Parishad Bajrang) அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர், கும்பல் படுகொலையின் வீடியோவை வெளியிட்டதாகவும், குற்றத்திற்கு ஆதரவாக பேஸ்புக்(Facebook) மற்றும் இன்ஸ்டாகிராமில்(Instagram) ஒரு பதிவை வெளியிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய செய்தி […]

உலகம் செய்தி

புகைபிடித்தல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 16 வயது மகளை கொன்ற பாகிஸ்தானிய பெண்

  • December 23, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில்(Pakistan) ஒரு பெண் புகைபிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது மகளை கழுத்தை நெரித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாப்(Punjab) மாநிலம் பஹாவல்பூர்(Bahawalpur) மாவட்டத்தில் உள்ள பஸ்தி சோகரில்(Basti Sohar) இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, 45 வயதான நபிலா அகமது(Nabila Ahmed) மற்றும் அவரது 16 வயது மகள் ஆயிஷா(Ayesha) இடையே புகைபிடிப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. பொது இடங்களில் தாய் புகைபிடிப்பதை […]

உலகம் செய்தி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட போதைப்பொருள் குற்றவாளி

  • December 23, 2025
  • 0 Comments

நாட்டின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான, ரூ.13,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரித்திக் பஜாஜ்(Rithik Bajaj), ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(United Arab Emirates) இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு(India) அழைத்து வரப்பட்டுள்ளார். டெல்லி(Delhi) காவல்துறையின் வழக்கின் கீழ் ரூ.13,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் செய்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ரித்திக் பஜாஜ், இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2024ல், டெல்லி […]

error: Content is protected !!