ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சில நாடுகள் மீது விசா தடை – புதிய நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானியா!

  • December 28, 2025
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை மீள பெறும் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை. இந்நிலையில் ஒப்பந்தத்திற்கு இணங்காத நாடுகள் மீது விசா தடை விதிக்கப்போவதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மஹ்மூத்தின் இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய இரு நாடுகளும் […]

இலங்கை செய்தி

“அலையோடு உறவாடு”: காங்கேசன்துறை கடற்கரையில் கோலாகலமாகத் தொடங்கிய உணவுத் திருவிழா

  • December 28, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்கரையில் “அலையோடு உறவாடு” எனும் மகுட வாசகத்துடன் மாபெரும் உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவை இணைந்து இந்த விசேட நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளன. வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இன்று காலை ஆரம்பமான இந்தத் திருவிழா, இரவு வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில் எமது மண்ணின் பாரம்பரிய உணவுகள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனைச் சந்தை மற்றும் […]

இந்தியா இலங்கை செய்தி

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய 3 இந்திய மீனவர்கள் கைது

  • December 28, 2025
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக மேலும் 3 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 1 இழுவை மடி படகுடன் இந்த மீனவர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். முறையான அனுமதிப்பத்திரமின்றி இலங்கை எல்லைக்குள் நுழைந்தது மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இவர்களையும் […]

இலங்கை செய்தி

இரத்தினபுரியில் தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; ஒருவர் கைது

  • December 28, 2025
  • 0 Comments

இரத்தினபுரி – அயகம, சமருகம பகுதியில் அயலவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சமருகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவருக்கும் அவரது அயலவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் […]

இலங்கை

புயலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு படையெடுக்கும் மக்கள்!! பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம்!

  • December 28, 2025
  • 0 Comments

நாட்டை உலுக்கிய சமீபத்திய புயல் நிலமையை தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை மீளவும் புத்துயிர் பெற்றுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.25 மில்லியனை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தித்வா சூறாவளியின் தாக்கத்தால் டிசம்பர் முதல் இரண்டு வாரங்களில் மந்தநிலை இருந்தபோதிலும் தற்போது மீளவும் சுற்றுலா துறை வளர்ச்சி பாதையில் பயணிப்பதாக புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான ஆண்டின் ஒட்டுமொத்த வருகை 2,103,593 ஆக […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் ஆதரவு இல்லங்களில் தொடரும் மரணங்கள்: புதிய சட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

  • December 28, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் பாதுகாப்பு மற்றும் முறையான வசதிகள் இல்லாத ‘ஆதரவு இல்லங்களில்’ தங்கியிருக்கும் எளிய மக்கள் உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. இத்தகைய இல்லங்களை ஒழுங்குமுறைப்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும், அது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாததே இந்த நிலைக்குக் காரணம் எனப் புகார் எழுந்துள்ளது. சிறையிலிருந்து விடுதலையானவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக ஒதுக்கப்படும் இந்த இல்லங்களைச் சில நில உரிமையாளர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அங்கு போதிய பராமரிப்பு […]

இந்தியா செய்தி

டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு!

  • December 28, 2025
  • 0 Comments

டெல்லியின் காற்றின் தரக்குறியீடு இன்று மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது. காற்றின் குறயீடானது 391 என்ற நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகர் முழுவதும் புகைமூட்டம் பரவி காணப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டெல்லியில் உள்ள 40 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், 20 நிலையங்கள் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) டெல்லியில் காலையில் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில் விமான […]

ஐரோப்பா

பின்லாந்தில் நிலவும் மோசமான வானிலை – விபத்தில் சிக்கிய விமானம்!

  • December 28, 2025
  • 0 Comments

பின்லாந்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தை சந்தித்துள்ளது. 150 பேரை ஏற்றிச் சென்ற வணிக விமானம் ஒன்று பின்லாந்தின் லாப்லாண்ட் (Lapland) பகுதியில் உள்ள கிட்டிலா (Kittila) விமான நிலையத்தில் தரையிறங்கும்போது தவறி விழும் நிலைக்கு சென்றதாக பின்லாந்து விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து பயணித்த விமானமே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளது. அதிக பனிப்பொழிவினால் இந்நிலை ஏற்பட்டதாகவும், பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் […]

இந்தியா செய்தி

புதுடெல்லியில் காற்றின் தரம் மேலும் வீழ்ச்சி

  • December 28, 2025
  • 0 Comments

இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு மீண்டும் அபாய நிலையை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 391-ஐ எட்டியுள்ள நிலையில், பல பகுதிகளில் இது 400-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆனந்த் விஹார் மற்றும் ஷாதிபூர் பகுதிகளில் AQI அளவு 440-ஐ கடந்து ‘அதிக மோசம்’ என்ற பிரிவில் உள்ளது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், மாசு துகள்கள் வெளியேற முடியாமல் புகைப்படலமாகத் தேங்கியுள்ளன. இதனால் பார்வைத் தெளிவு குறைந்து […]

உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • December 28, 2025
  • 0 Comments

பெருவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!