வட அமெரிக்கா

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பைடன் மறுபிசீலனை செய்ய வேண்டும் ; ஒபாமா

  • July 19, 2024
  • 0 Comments

அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகக் கோரி பராக் ஒமாபா தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாநாயக வேட்பாளரகா தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக போட்டியிடுகிறார். இந்திலையில் பைடன் தேர்தலில் போட்டியிடவுள்ளதை மறுபரீசீலனை செய்யவேண்டம் எ்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியினரிடையே கூறி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஏனெனில் போட்டிகள் நிறைந்த முக்கியமான 7 […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

உலகெங்கிலும் முடங்கிய தகவல் தொழில்நுட்ப சேவை : பல நிறுவனங்கள் பாதிப்பு!

  • July 19, 2024
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் திடீரென தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன. லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்ப செயலிழப்பிற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவற்றை சீர் […]

இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விலைமனு கோரும் நடவடிக்கை நிறுத்தம்!

  • July 19, 2024
  • 0 Comments

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமையை மாற்றுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்த விலைமனு கோரும் நடவடிக்கையை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அரச தொழில் நிறுவன மறுசீரமைப்பு பிரிவு, ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது. இந்த ஏல முறைக்குப் பதிலாக மாற்று முறையைக் கடைப்பிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒழுங்குமுறைச் சட்டம் கண்டிப்பாக பயன்படுத்தப்படும்!

  • July 19, 2024
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், சர்வஜன வாக்கெடுப்பு தவிர நடைபெறும் அனைத்து தேர்தலிலும் இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கட்சியின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் திரு சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா

வங்கதேச வன்முறை: 32 பேர் பலி, 100க்கு மேற்பட்டோர் படுகாயம்

  • July 19, 2024
  • 0 Comments

அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி மாணவர்களின் போராட்டத்தில் நேற்று (ஜூலை 18) வன்முறை அதிகரித்ததில் 32 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரசு தொலைக்காட்சி தலைமையகத்துக்கு தீ வைத்ததால் போராட்டம் மேலும் மோசமடைந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான இடஒதுக்கீடு உட்பட பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் டாக்கா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பல வாரங்களாக […]

பொழுதுபோக்கு

வெளிநாட்டுக்கு பறந்தார் அல்லு அர்ஜுன்.. “புஷ்பா – 2“ ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

  • July 19, 2024
  • 0 Comments

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘புஷ்பா 2’ இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி வெளியாகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் ஈகோ பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 2021ம் ஆண்டு வெளியனா ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. […]

உலகம்

சேவைகளை நிறுத்திய அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்!

  • July 19, 2024
  • 0 Comments

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அனைத்து விமானங்களையும் தகவல்தொடர்பு சிக்கல்களால் தாமதப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் நிலைப் பக்கத்தின்படி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முக்கிய கேரியர் தரை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. அறிக்கைகள் குறித்து நிறுவனம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், மக்கள் இன்று காலை தங்கள் விமானங்களில் உள்ள சிக்கல்களைப் புகாரளிக்க சமூக ஊடகங்களுக்கு அழைத்துச் சென்றனர், மற்ற சேவைகள் தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் X இல் பதிவிட்ட ஒரு பயணி, முன்பு ட்விட்டரில், […]

பொழுதுபோக்கு

நடிகை ஷாலினிக்கு நடந்நது என்ன? படுத்த படுக்கை.. தீயாய் பரவும் புகைப்படம்

  • July 19, 2024
  • 0 Comments

நடிகை ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே மைனர் சர்ஜரி ஒன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. நடிகை ஷாலினி இன்னமும் பூரணமாக குணமடையவில்லை என்று தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில், படுக்கையில் படுத்துக் கிடக்கும் ஷாலினியுடன் மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் அஜித். […]

தென் அமெரிக்கா

சிலியில் 7.3 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • July 19, 2024
  • 0 Comments

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 7.3 ரிக்டராகப் பதிவானது என்று ஐரோப்பிய மத்தியதரைகடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கமானது சிலி நாட்டின் கடற்கரை நகரமாக அன்டோஃபகாஸ்டாவில் பூமிக்கு அடியில் 126 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நிலநடுக்கம் கடற்கரை நகரத்தில் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய நகரத்தை உருவாக்க திட்டம்

  • July 19, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் – குயின்ஸ்லாந்தில் உள்ள கபூல்ச்சூரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரபா என்று அழைக்கப்படும் புதிய நகரத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 70,000 மக்கள் வசிக்கும் என மாநில அரசு கூறுகிறது. புதிய நகரத்தில் 228 குடியிருப்புகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையம் மற்றும் சேவை மையம் இருக்கும். 315 சதுர மீட்டர் ப்ளாட்டின் விலை சுமார் 280,000 டொலர் மற்றும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வசிக்கக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த […]

error: Content is protected !!