ஐரோப்பா செய்தி

யார்க்ஷயர் மற்றும் நார்த் வேல்ஸ் ஆகிய பகுதிவாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

யார்க்ஷயர் மற்றும் நார்த் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் இரண்டு அம்பர் வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இது இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் பனிப்பொழிவுக்கான நான்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு நோர்த் வேல்ஸ் பொலிஸார் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி தேவைப்பட்டால் மாத்திரம் வெளியே செல்லுமாறு பரிந்துறைத்துள்ளனர்.

கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷயரில் உள்ள எம்62 நெடுஞ்சாலையில் கடும் பனி காரணமாக ஓட்டுநர்கள் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

வடமேற்கு வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்தில் எளிதாக 50 மைல் வேகத்தில் காற்று 30 முதல் 40 செ.மீ வரை பனியுடன் மோதும் போக்கில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல் வடமேற்கு வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்தில் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி