ஐரோப்பா செய்தி

புட்டினை கைது செய்ய விதிக்கப்பட்ட உத்தரவு – இனி நடக்கப்போவது என்ன?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது.

உக்ரேனைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பிள்ளைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்திய போர்க் குற்றத்திற்கு புட்டின் பொறுப்பு என்று நீதிமன்றம் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

சட்டப்படிப் பார்த்தால் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுகள் ரஷ்யாவிற்கு அர்த்தமற்றவை என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் 123 உறுப்பு நாடுகள் உள்ளன.

அவற்றில் எந்த நாட்டிற்கு புட்டின் சென்றாலும் அவரைத் தடுத்துவைத்து அனுப்பிவைக்க உறுப்பு நாடுகள் கடமைப்பட்டுள்ளன.

ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை உறுப்பு நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!