ஐரோப்பா

பிரான்ஸ் பாடசாலை ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவன்

பிரான்ஸில் உள்ள பாடசாலை ஒன்று க்கு ஆயுதத்துடன் வருகை தந்த 15 வயதுடைய மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Collège Albert Camus பாடசாலை வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன், 12 செ.மீ நீளமுடைய கத்தி ஒன்றை தனது பைக்குள் வைத்து பாடசாலைக்கு எடுத்து வந்திருந்தார்.

இந்த நிலையில், அது சக மாணவர்களால் அடையாளம் காணப்பட்டு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குறித்த மாணவன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

குறித்த மாணவன் Yemen நாட்டில் பிறந்த பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர் எனவும், எந்த பயங்கரவாத பின்னணியும் அம்மாணவனுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து பாடசாலை மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், அவர்களுக்கு அங்கு உளநல சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content