பொழுதுபோக்கு

விஜய்யின் வெற்றிக்கு முதலில் அஸ்திவாரம் போட்டவர் கேப்டன்தான்… புளூசட்டை மாறனின் பதிவு

விஜய்யின் கோட் படம் இன்று வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், விஜய் காந்தின் ஏ.ஐ வரவு இதில் பிளஸ் பொய்ன்ட்டாக இருக்கின்றது.

இந்த நிலையில், விஜய்யின் அப்பா செந்தூர பாண்டியன் படம் குறித்து பேசிய சில வார்த்தைகளை புளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“செந்தூர பாண்டியில் விஜய்யுடன் பிரபல நடிகர் நடித்தால் படம் வெற்றி பெறும். அது விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும் என நினைத்தேன்.

ஆகவே விஜயகாந்திற்கு போன் செய்து ‘உங்களை சந்திக்க வரலாமா?’ என கேட்டேன். உடனே போனை வைத்து விட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் அவரே என் வீட்டிற்கு வந்தார்‌. ‘என்ன விஷயம் சார்?’ என்றார். நான் விபரம் சொன்னேன்.

‘எத்தனை நாள் கால்ஷீட் தரனும்? எப்ப வரனும்’ என்று உடனே ஓகே சொன்னார்.

‘உங்களுக்கு சம்பளம் எவ்வளவு தரனும்?’ என கேட்டேன்.

‘எனக்கு எதுவும் வேண்டாம். படம் நல்லபடியா முடியனும். விஜய் தம்பி ஜெயிக்கனும். அது போதும்’ என்றார்.

விஜய்யின் வெற்றிக்கு முதலில் அஸ்திவாரம் போட்டவர் கேப்டன்தான்

– S.A.சந்திரசேகர்‌.”

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content