பொழுதுபோக்கு

வடிவேலு தொடர்ந்த மானநஷ்ட வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிங்கமுத்து Youtube சேனல்களில் அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட கோரியும், தன்னை பற்றி இனி அவதூறாக பேச கூடாது என்பதற்காக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணனையை மாஸ்டர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றம் மாற்றியது.

இந்திய நிலையில் சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகி, சாட்சியங்களை சமர்ப்பித்தார்.

இதைத்தொடர்ந்து சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர், வடிவேலுடன் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதற்காக வழக்கம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால், இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதகவும், குறுக்கு விசாரணை தொடர்பாக அங்கே முறையிட்டு கொள்ளலாம் என கூறி வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

(Visited 44 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!