இலங்கை

இலங்கையில் அதிக கணினி அறிவைக் கொண்டும் வேலையற்ற இளைஞர் யுவதிகள்

இலங்கையில் வேலையற்ற இளைஞர் யுவதிகளில் சுமார் 80 சதவீதமானோர் அதிக கணினி அறிவைக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.

அந்த திணைக்களம் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையில் கணினி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு பற்றிய 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கணினி கல்வியறிவு 2022ஆம் ஆண்டில் 36சதவீதமாக பதிவாகியுள்ளது. இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீத வளர்ச்சியாகும் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகர்ப்புற மக்களின் கணினி கல்வியறிவு 48.9 சதவீதமாக உள்ளதுடன் கிராமப்புறங்களில் 34.6 சதவீதமாக உள்ளது.

பாலினத்தின் அடிப்படையில் ஆண்களின் கணினி கல்வியறிவு பெண்களை விட அதிகமாக உள்ளது.

2022ஆம் ஆண்டில், ஆண்களின் கணினி கல்வியறிவு 37.3 சதவீதமாகவும், பெண்களின் கணினி கல்வியறிவு 34.8 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்