இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற கோர சம்பவம் : தன் பிள்ளைகள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த தந்தை!

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 08 வயது மகள் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) இரவு கட்டுகுருந்த புகையிரத நிலைய பொல வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது மூன்று பிள்ளைகளுடன் தனது வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எல்ல, வெதர்வில் வத்த பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

எல்ல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 19 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content