“கும்கி 2” – கதாநாயகனை முட்டித் தள்ளிய யானை – நடந்தது என்ன?

இந்த காட்சியைப் பார்க்கும் போது அறிமுக நாயகனான இருந்தாலும், டூப் போடாமல் தைரியமாக நடித்துள்ளார்.
இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்துள்ள கதாநாயகன் குறித்து படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் குறிப்பிடுகையில்,
“ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி , தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரத்துக்கு தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியாக காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாயினும், தொடர்ந்து பயிற்சி செய்து யானையுடன் உள்ள தொடர்பை உயிர்ப்பித்துள்ளார். மதி யின் நடிப்பைப் பார்த்து, அவரது ஆர்வமும் முயற்சியும் தெளிவாகத் தெரிகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.





