காலி சிறைச்சாலையில் மர்ம நோயினால் இருவர் உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் அடையாளம் காணப்படாத நோயால் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, சிறை வளாகத்தில் உள்ள அனைத்து நபர்களும் தற்போது முகமூடி அணிந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)