ஆஸ்திரேலியா செய்தி

இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற முயன்றசி! அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரபரப்பு

அவுஸ்திரேலியாவின் – சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

சிட்னி விமான நிலையத்தின் பாதுகாப்பை மீறி இலங்கைக்கு வரவிருந்த விமானத்தின் சரக்கு பிரிவில் நபர் ஒருவர் நுழைந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிட்னி சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஆய்வுப் பகுதி வழியாக ஒருவர் ஓடியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர் 30 வயதுடையவர் என கூறப்படுகிறது. சந்தேக நபரை கைது செய்த பின்னர், அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த நபர் சரக்கு பகுதிக்குள் பிரவேசித்த பின்னர் பொலிசார் அழைத்துச் செல்லும் காட்சிகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அவர் வேறு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!