இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உக்ரைன் போரை முடிக்க உதவும் – ட்ரம்ப் நம்பிக்கை!
இந்தியாவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தம் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
அதேபோல் அமெரிக்கப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை பூஜ்ஜியமாகக் குறைத்து $500 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை இந்தியா கொள்வனவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இது உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும், ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் – வரி குறைப்பை அறிவித்தார் ட்ரம்ப்!




