ஈரானை தொட்டால் மத்திய கிழக்கில் பிராந்திய போர் வெடிக்கும் – கமேனி எச்சரிக்கை!
அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் மத்திய கிழக்கில் பிராந்திய போரை ஏற்படுத்தும் என ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி ( Ali Khamenei) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் சமீபத்திய மிரட்டல் குறித்து தெஹ்ரானில் இன்று கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா அதன் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற கனிம வளங்களில் ஆர்வமாக இருப்பதாக விவரித்தார்.
அவர்கள் “முன்பு கட்டுப்படுத்தியதைப் போலவே இந்த நாட்டையும் கைப்பற்ற விரும்புவதாகவும், இந்த முறை அவர்கள் ஒரு போரை நடத்தினால், அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் “நாங்கள் தூண்டுபவர்கள் அல்ல, நாங்கள் யாருக்கும் அநீதி இழைக்கப் போவதில்லை, எந்த நாட்டையும் தாக்க நாங்கள் திட்டமிடவில்லை.
ஆனால் யாராவது பேராசை காட்டி தாக்கவோ அல்லது துன்புறுத்தவோ விரும்பினால், ஈரானிய தேசம் அவர்களுக்கு கடுமையான அடியை ஏற்படுத்தும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.




