ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் ஆபத்து – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

விக்டோரியாவில் இரண்டு புதிய தட்டம்மை வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே, அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு நோயாளிகளும் மெல்போர்னில் உள்ள பல பிரபலமான இடங்களில் சுற்றித் திரிந்ததாகத் தெரியவந்துள்ளது.
அதாவது கடந்த பதினேழாம் திகதி முதல் 24ஆம் திகதி வரையாகும்.
இதன்படி, அறிகுறிகள் தொடர்பில் பொதுமக்கள் குறிப்பாக அவதானமாக இருக்க வேண்டுமென விக்டோரியா சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
(Visited 12 times, 1 visits today)