இலங்கை செய்தி

வவுனியா இளைஞரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் சென்ற பெண்கள்

யாழ்ப்பாணம் கோப்பாயில் வீடொன்றில் வைத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த மூன்று பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பகுதியைச் சேர்ந்த இவர், வாடகைப் பயணம் மேற்கொள்வதாகக் கூறி வேன் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நில்லநாதன் சுமன் என்ற முச்சக்கர வண்டி சாரதி, சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியை வேறு ஒரு பிரதேசத்திற்கு கொண்டு செல்ல சந்தேக நபர்கள் தயாராக இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த 20 முதல் 30 வயதான சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!